Just In
- 14 min ago
ஜியோவுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்த புதிய ஆப்.! எதற்குத் தெரியுமா?
- 59 min ago
ஓடியாங்க ஓடியாங்க! ரூ.12,901 பாஸ்.. iPhone 14 மாடலை பிளிப்கார்ட்டில் இப்படியும் வாங்கலாமா?
- 1 hr ago
பூமியின் அழிவு நாளை சுட்டி காட்டிய டூம்ஸ் டே கிளாக்.! இன்னும் 90 வினாடிகள் தான் மிச்சமா?
- 2 hrs ago
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
Don't Miss
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- News
ஈபிஎஸ் முறையீடு ஏற்பு.. ஜன.30ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை.. முக்கிய உத்தரவு உண்டா? ஏன் முக்கியம்
- Movies
யாராக இருந்தாலும் விவசாயியாக இருப்பது முக்கியம்... எல்லாம் அதுக்காக தான்: எமோஷனலான கார்த்தி
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்..பிரசவ அறை,4கை குழந்தை, தாய் மரணம்,இண்டர்வியூவ்-க்கு மத்தியில் பணிநீக்கம்..!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பாட்ஷாவாக மாறிய WhatsApp: 1 மாதத்தில் 23 லட்ச இந்திய கணக்குகள் க்ளோஸ்!
உலகின் மிகவும் பிரபலமான உடனடி செய்தி பகிர்வு தளமாக வாட்ஸ்அப் இருக்கிறது. WhatsApp பயனர்களின் தேவையறிந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேநேரத்தில் யாரும் இந்த தளத்தை தவறாகப் பயன்படுத்தவிடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்து வருகிறது.

வாட்ஸ்அப் இணைக்க அறிக்கை
மத்திய அரசும் தொடர்ந்து இதற்கான நிபந்தனைகளை உறுதி செய்து வருகிறது. அதில் ஒன்று மாதாந்திர இணக்க அறிக்கை ஆகும். அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் மாதந்தோறும் எடுக்கும் நடவடிக்கையை இணக்க அறிக்கையாக சமர்பித்து வருகிறது. இணைக்க அறிக்கையில் தவறான வாட்ஸ்அப் கணக்குகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பயனர்கள் அளிக்கும் புகார்கள் குறித்து தெரிவிக்கப்படுகின்றன.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க அக்டோபர் 2022 க்கான அதன் மாதாந்திர அறிக்கையை WhatsApp வெளியிட்டுள்ளது. விதிகள் மீறல், பயனர்களிடம் பெற்ற புகார்கள் என்ற அடிப்படையில் வாட்ஸ்அப் இல் இருந்து சுமார் 23 லட்ச இந்தயர்களின் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகள் மற்றும் கொள்கைகளை மீறியதற்காக 8.1 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் மாதம் எடுத்த நடவடிக்கை
தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் விதி 4(1)(d) இன் படி பயனர்களின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி, வாட்ஸ்அப் தினசரி நடவடிக்கை எடுத்து மாதாந்திர அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 லட்சத்திற்கும் அதிகமான இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்திருக்கிறது.

23 லட்ச கணக்குகள் தடை
அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 2022 வரை பயனர்களிடம் இருந்து பெற்ற புகார்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் 2,324,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட 23 லட்ச கணக்குகளில் பயனர் புகார்களை பெறுவதற்கு முன்பே 811,000 இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. தளத்தின் கொள்கைகள் மற்றும் விதிகளுக்கு இணங்காததால் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் கணக்கு ஏன் தடை?
ஸ்பேம் மெசேஜ்கள் குறித்து பல புகார்களை பெற்றால், ஒரு பயனர் விதித்த நிபந்தனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால் வாட்ஸ்அப் பயனர்கள் கணக்குகளை தடை செய்கிறது. ஸ்பேம் அல்லது மோசடி பயனர்களைக் கண்டறிய, தானியங்கி முறைகளை வாட்ஸ்அப் பயன்படுத்துகிறது.

WhatsApp கணக்குகள் குறித்து எவ்வாறு புகாரளிப்பது?
"wa@support.whatsapp.com" என்ற மின்னஞ்சல் மூலம் தீங்கிழைக்கும் கணக்குகள் குறித்து அனைத்து பயனர்களும் புகார் அளிக்கலாம். உங்கள் கணக்கு தடை செய்யப்பட்டிருந்தால் இதே மெயில் ஐடி மூலம் சிக்கலை தெரிவிக்கலாம். புகார் அளிக்கும் போது காரணத்திற்கான சான்றாக ஸ்க்ரீன் ஷாட்டை பகிர வேண்டும். உங்கள் வாட்ஸ்அப் கணக்கை திறந்து வாட்ஸ்அப் சேட் என்ற பயன்பாட்டை ஓபன் செய்து Tap More options என்பதை கிளிக் செய்து More என்ற தேர்வை கிளிக் செய்யலாம். இதில் காட்டப்படும் பிளாக் என்ற விருப்பத்தை தேர்வு செய்து புகாருள்ள கணக்கை பிளாக் செய்யலாம்.

45 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை
மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு என புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதில் பிரதான ஒன்று 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களை கொண்ட தளங்கள், பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 45 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதாகும். இதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து மாதந்தோறும் அறிக்கையை சமர்பித்து வருகிறது.

வாட்ஸ்அப் மின்னஞ்சல் ஐடி
இதையடுத்து பயனர்களை குறைகளை நேரடியாக அறிவிக்க வாட்ஸ்அப் வழிவகை செய்திருக்கிறது. பயனர்கள் புகார்களை தெரிவிப்பதற்கு என வாட்ஸ்அப் மின்னஞ்சல் ஐடியை அறிவித்துள்ளது.அது grievance_officer_wa@support.whatsapp.com என்ற மின்னஞ்சல் ஐடி ஆகும். இந்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதேபோல் இந்திய குறைதீர்க்கும் அதிகாரிகளுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பலாம். துஷ்பிரயோகம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை நிறுத்துவதற்கு வாட்ஸஅப் அதன் சொந்த கருவிகளை கொண்டு கண்காணித்து வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470