ட்விட்டரை பின்னுக்கு தள்ளியது வாட்ஸ் ஆப்...!
இன்று ஒரு நாளைக்கு 100 மெசேஜ் தான் மொபைல்களில் அனுப்ப முடியும் என்றவுடன் மிகவும் வேகமாக வளர ஆரம்பித்தது தான் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவை.
இதில் பேஸ்புக் அனைவரிடமும் மிகவும் முக்கிய இடத்தை பிடித்து விட்டது எனலாம் தற்போது அனைத்து வயதினரும் பயன்படுத்தி வருவது பேஸ்புக் தான்.
ஆனால் தனிப்பட்ட முறையில் இருவர் இன்று மெசேஜ் செய்ய பயன்படுத்துவது வாட்ஸ் ஆப் தான், இன்று அதிகமான இளைஞர்களும் இதைத் தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
இன்று வாட்ஸ் ஆப் க்கு ஒரு சிறந்த நாள் என்றே கூறலாம் 40 கோடி மாதந்திர ரெகுலர் யூஸர்ஸை பெற்று ட்விட்டரை விந்தி சென்று விட்டது வாட்ஸ் ஆப்.

இன்று ட்விட்டர் அக்கவுன்ட் கூட இல்லாமல் பலரை நாம் பார்க்கலாம் ஆனால் வாட்ஸ் ஆப் இல்லாமல் நிச்சயம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரை பார்க்க முடியாது.
விரைவில் இது பேஸ்புக்கையும் விந்தி சென்றாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications








