Home
News

இந்தியாவில் eRupee அறிமுகம்.. இரூப்பி என்றால் என்ன? இதை எப்படி பயன்படுத்துவது?

இந்தியாவின் இரூப்பி (eRupee) விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இ-ரூப்பியா..! அப்படி என்றால் என்ன? இது என்ன செய்யும்? மக்கள் இதை எப்படி பயன்படுத்தலாம் என்பது போன்ற முக்கியமான தகவலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

இந்தியாவின் eRupee என்பது, டிஜிட்டல் ரூபாய் அல்லது டிஜிட்டல் ஐஎன்ஆர் (INR) அல்லது E-கரன்ஸி ரூபாய் (e-currency rupee) என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய ரூபாயின் டோக்கனைஸ் செய்யப்பட்ட டிஜிட்டல் பதிப்பாகும். இது இந்திய ரிசர்வ் வங்கியால், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயமாக வெளியிடப்பட்டு பயன்பாட்டிற்கு தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தியாவில் eRupee அறிமுகம்.. இரூப்பி என்றால் என்ன?

டிஜிட்டல் ரூபாய் அல்லது டிஜிட்டல் நாணயம் என்பது காகிதப் பணத்தின் டிஜிட்டல் வடிவமாகும். இ-ரூபாய் மற்றும் ரொக்கப் பணத்தின் மதிப்பு இரண்டுமே சமமானது. உதாரணமாக, 1 டிஜிட்டல் ரூபாய் என்பது 1 ரூபாய் பணத்திற்கு சமம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பொருள், கிரிப்டோகரன்சியைப் போலன்றி, இ-ரூபாயின் மதிப்பு எப்போதும் ஏற்ற இறக்கமாக இருக்காது என்பதே ஆகும்.

இந்தியாவின் eRupee என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயமாக (CBDC) பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் டிஜிட்டல் முறை பணமாகும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விரைவில் UPI QR குறியீடுகள் மூலம் eRupee பணம் செலுத்த அனுமதிக்கும் என்று தெரிவித்துள்ளது. இப்போது இந்த முறை வளர்ச்சியில் உள்ளது.

eRupee வரிசையில், 1 ரூபாய், 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 போன்ற பண மதிப்புகள் கிடைக்குமென்று கூறப்படுகிறது. தடையற்ற அனுபவத்திற்காக மக்கள் விரைவில் இனி UPI QR குறியீடுகள் மூலம் CBDC கட்டணங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த டிஜிட்டல் பணமுறையை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் eRupee அறிமுகம்.. இரூப்பி என்றால் என்ன?

கடந்த வாரம் G20 நிகழ்வில், RBI பிரதிநிதிகள் UPI QR குறியீடுகள் மூலம் eRupee பணம் செலுத்துவது ஜூலை மாத இறுதியில் சாத்தியமாகும் என்று கூறியிருந்தது. இந்த செய்தியை தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது. UPI மூலம் CBDC பணம் செலுத்துவதற்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CBDC -ஐ ஏற்கத் தேர்வு செய்யும் சில்லறை விற்பனையாளர்கள் தங்களின் தற்போதைய UPI QR குறியீடுகளைப் பயன்படுத்தி eRupee பணத்தை பெறலாம் மற்றும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, பாரத ஸ்டேட் வங்கி (State Bank Of India), பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda), ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) போன்ற வங்கிகள் eRupee சேவையை ஆதரிக்கின்றன.

இதில் எச்டிஎப்சி (HDFC) வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) மற்றும் யெஸ் வங்கி (Yes Bank) ஆகியவை RBI உடன் நடந்து வரும் இந்த eRupee சோதனைகளில் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பல வணிகர்கள் தற்போது CBDC இன் eRupee ஐ சோதனை செய்ய RBI -க்கு உதவுகின்றன. CBDC கள் கிரிப்டோகரன்சிகள் போல வேலை செய்கின்றன.

இந்தியாவில் eRupee அறிமுகம்.. இரூப்பி என்றால் என்ன?

ஆனால் அவை நேரடியாக ஒழுங்குபடுத்தப்பட்டு ஒரு நாட்டின் மத்திய வங்கிகளால் வழங்கப்படுகின்றன என்பது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது. டிசம்பர் 1, 2022 அன்று புது டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் புவனேஷ்வரில் eRupee க்கான சோதனைகள் தொடங்கப்பட்டன. RBI கவர்னர் சக்திகாந்த தாஸ், CBDCகள் இன்றைய உலகில் நாணயங்கள் பயன்படுத்தப்படும் விதத்தை அடிப்படையாக மாற்றும் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

கிரிப்டோகரன்சி பயன்பாட்டின் உச்சக்கட்டத்தின் போது CBDCகளின் தேவை அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் நாடுகள் ஒழுங்குபடுத்தப்படாத பரிமாற்றங்களை முறியடிக்க முயன்றன. உத்தியோகபூர்வ CBDCகள் ரொக்கத்தைப் போலவே கட்டுப்படுத்தப்படுகின்றன, ஆனால் காகித நாணயத்தின் மீது குறைந்த சார்பு கொண்டவை என்று கூறப்பட்டுள்ளது. eRupee விரைவில் இந்தியாவில் களமிறக்கப்படும் என்று கூறப்படுகிறது. இனி மக்கள் அவர்களின் இ-வாலெட்டில் இ-ரூப்பி (eRupee) பணத்தை பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
What is eRupee and When RBI is Introducing CBDC Payments Via UPI QR Code Scanning in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X