நீங்கள் இறந்த பின் உங்களது ஆன்லைன் கணக்குகளின் நிலை என்ன
வாழும் போது இணையங்களில் இருக்கும் பல சேவைகளை பயன்படுத்துகின்றீர்கள், பல சேவைகளில் உங்களது முழு தகவல்களையும் கொடுக்கின்றீர்கள். வாழும் வரை அவைகளை பயன்படுத்தும் நீங்கள் மரணித்த பின் அந்த கணக்குகள் என்ன ஆகின்றன என்று உங்களுக்கு தெரியுமா...
தொழில்நுட்ப பாகங்களின் மூலம் செய்யப்பட்ட பிரபலங்களின் உருவப்படம்
இறந்த பின் ஆன்லைன் கணக்குளை மற்றவர்கள் இயக்கி அதனை முடக்க பல நிறுவனங்களும் வாய்ப்பளிக்கின்றன. அவைகளை எப்படி செய்வதென்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.....

பேஸ்புக்
முகநூலில் இதை செயலப்டுத்த இரு முறைகள் இருக்கின்றது, முதலில் இறந்தவர்களின் கனக்கை நினைவு பக்கமாக மாற்றலாம், இதற்கு இறந்தவரின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ நினைவு கனக்காக மாற்றும் அனுபதி கோரி விண்ணப்பிக்கலாம்.
அடுத்து இறந்தவரின் கனக்கை முடக்க முகநூலில் தெரிவிக்கலாம், இது இறந்தவரின் உறவினர்களால் மட்டும் தான் செய்ய முடியும்.

கூகுள் அல்லது ஜிமெயில் கனக்கு
கூகுள் கனக்குகளின் தகவல்களை பெற முறையான விண்ணப்பம் மற்றும் அதற்கான சான்றுகளை அளிக்க வேண்டும் அதன் பின் சான்றுகளை சரி பார்த்து கூகுள் தரப்பில் இருந்து உங்களுக்கு பதில் கிடைக்கும்

ட்விட்டர்
ட்விட்டர் மற்றவர்களின் கனக்கை உறவினர்கள் அல்லாதவர்களுக்கு நிச்சயம் கொடுக்காது, ஆனால் கனக்கை முற்றிலும் முடக்க உறவினர் அல்லது நண்பர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று கொள்ளும்

பின்டெரஸ்ட்
இறந்தவர்களின் தகவல்களை கொடுத்தால் பின்டெரஸ்ட் கனக்கை முற்றிலுமாக முடக்கி விடும்.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராமில் இறந்தவர்களின் கனக்கை முடக்க மின்னஞ்சல் மூலம் பேச்சுவார்த்தை நடக்கும், இதன் பின் இறந்தவரின் சான்ருகளை கொடுக்க வேண்டும்.

யாஹூ
இறந்தவரின் சான்றுகளை கொடுத்தால் யாஹூ கனக்கு முற்றிலுமாக முடக்கப்பட்டு விடும்.

பேபால்
பேபால் கனக்கை முடக்க கோறும் கடிதம், மற்றும் தேவையான தகவல்களை குறிப்பிட்டு அதனுடன் தேவையான ஆதாரங்களையும் பேக்ஸ் மூலம் அனுப்ப வேண்டும்.

டிஜிட்டல்
டிஜிட்டல் உரிமைகளை பெறுவது இன்த காலகட்டத்தில் மிகவும் அவதசியமாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








