பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பி காதலி தற்கொலை: பார்த்து பதறிய காதலன்.!
தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தாய் தனியார் மருத்துவமணையில் பணியாற்றி வருகிறார், அவர் மாலை 6.30மணிக்கு மருத்துவமனை சென்றுள்ளார்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த பர்கானாஸ் மாவடத்தில் இருக்கும் 24 பகுதியில் வசிக்கும் இளம்பெண் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த பெண் 12-ம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,இந்நிலையில் அந்த பெண்ணிற்கும் அவரது காதலனுக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

அப்போது தான் தற்கொலை செய்துவிடுவேன் என்று எனக் காதலனிடம் கூறியுள்ளார், மேலும் கடுமையான வாக்குவாதம் தொடர்ந்ததால் அந்த இளம்பெண் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
மேலும் இந்த விபரீத முடிவை அவரது காதலுனும் பார்க்க வேண்டும் என்று பேஸ்புக்கில் லைவ் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு நீண்ட நேரமாக இந்த லைட் காட்சி சென்றுள்ளது. இதில் அந்தப் பெண் அறையில் உள்ள சீலிங் ஃபேனில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் காதலியின் தற்கொலை சம்பவத்தை லைவ் வீடியோவில் பார்த்த காதலன் கதறி அழுதுள்ளார், மேலும் அந்தப் பெண்ணின் பேஸ்புக்கில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் பார்த்துப் பயந்துள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தாய் தனியார் மருத்துவமணையில் பணியாற்றி வருகிறார், அவர் மாலை 6.30மணிக்கு மருத்துவமனை சென்றுள்ளார். மேலும் அவரது சகோதரன் மற்றும் தந்தை உடன் இல்லாததால், இரவு முழுவதும் தனியாக இருந்துள்ளார் அந்த இளம்பெண்.

அடுத்த நாள் காலை ஞாயிறு என்பதால் 8.30 மணியாகியும் மகள் கதவை திறக்காததால் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளார் தாய், அப்போது அறையில் உள்ள சீலிங் ஃபேனில் இருந்து மகள் சடலமாக தொங்கும் காட்சியை பார்த்து கதறி அழுதார். மேலும் இந்த வழக்கைப் பதிவு செய்த போலீசார்,அந்தப் பெண் காதலித்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications