வீட்டில் இருந்து வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஊதியத்தில் மாறுதல்கள் வருமா? மத்திய தொழிலாளர்நலத்துறை அமைச்சகம்
தற்போது ஒமைக்ரான் வைரஸ் என்ற புதிய கோவிட் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது வெளி மாநிலங்களில் இருந்து விமானத்தின் மூலம் தமிழகத்திற்குள் பயணிகள் வர இ-பதிவு கட்டாயம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. பின்பு உள் நாட்டுக்குள்ளேயே பயணிகள் கட்டுப்பாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிலர் இன்னும் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்பும் பணியாளர்களுக்கு சம்பள கட்டுமானத்தில் சில மாறுதல்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது நிரந்தர Work From Home கேட்கும் பணியாளர்களுக்கு ஊதியத்தில் இருந்து சில மாறுதல்களை செய்ய நிறுவனங்களுக்கு அனுமதி தரும் முடிவில் இருக்கிறது மத்திய தொழிலாளர் அமைச்சகம். குறிப்பாக வீட்டு வாடகை அலவன்ஸ் போன்றவற்றை க்ளைம் செய்து கொள்ளும் வசதிகள் இனி வரும் காலங்களில் குறையும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதுதொடர்பான மாற்றங்களே விரைவில் மத்திய அமைச்சகத்தால் அமல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால் பணியாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுகளை எப்படி சரிக்கட்டுவது தொடர்பான மாறுதல் உத்தரவுகளும் நிறுவனங்களுக்குப் பிறப்பிக்கப்பட உள்ளது. எனவே மத்திய தொழிலாளர் அமைச்சகம், பணியாளர் மற்றும்
நிறுவனம் என இரு தரப்புகளையும் யோசித்துப் பலன் அளிக்கும் வகையிலான ஒரு முக்கிய முடிவை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் வீட்டில் இருந்து வேலை செய்யும் பணியாளர்களுக்கு மின்சாரம், இணைய சேவை என நிறுவனம் ஈடுகட்டுவதற்கான செலவுகள் அதிகம் இருக்கின்றன. அதேசமயம் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்பதால் பலரும் முக்கிய மெட்ரோ நகரங்களைவிட்டு வெளியேறி இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களுக்கு சென்று வசிக்கத் தொடங்கி உள்ளனர். எனவே இதன் மூலம் வாழ்வாதார செலவுகள் பணியாளர்களுக்கு குறையும் என்பதை பணி அமர்த்தும் நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் க்ளைம் செய்யப்படும் பணம், அலவன்ஸ் பணம், ப்ரொஃபெஷனல் வரி போன்றவற்றில் சில மாறுதல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் வரிச்சுமை பணியாளர்களுக்கு குறையும் என்று கூறப்படுகிறது. அதேபோல்அடிப்படை ஊதியத்திலும் சில மாறுதல்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications