Just In
- 1 hr ago
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone (2) பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- 2 hrs ago
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- 5 hrs ago
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- 5 hrs ago
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
Don't Miss
- Finance
இந்தியாவை தேடி வரும் வெளி நாட்டவர்கள்... வளர்ச்சி பாதையில் இந்தியா.. எப்படி தெரியுமா?
- Movies
முதன்முறையாக டாட்டூ போட்ட அந்நியன் ஹீரோயின் சதா.. அதுவும் என்ன விஷயத்துக்காக தெரியுமா?
- News
மதுரையில் எங்கள் எய்ம்ஸ் எங்கே?.. "ஒற்றை செங்கல்" விவகாரத்தை கையில் எடுத்த சு.வெங்கடேசன் எம்பி
- Lifestyle
உங்க பிறந்த தேதி 7,16 மற்றும் 25 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Sports
அவர் இல்லைனா இந்தியா ஜெயிக்காது.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. ரோகித்திற்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை!
- Automobiles
நெதர்லாந்து மக்களின் மூளையே மூளைதான்... சைக்கிள்களை நிறுத்துவதற்கு ரூ.533 கோடியில் பார்க்கிங் பகுதி!!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காத்திருந்தது போதும்., விரைவில் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும்: PM Modi அறிவிப்பு!
5G-க்கான காத்திருப்பு நேரம் முடிந்துவிட்டது என PM Modi சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய கிராமங்கள் ஆப்டிகல் ஃபைபருக்கான அணுகலைப் பெறும் என்றும் நாட்டில் உள்ள ஒவ்வொரு மூலையிலும் இணையம் சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5ஜி சேவை விரைவில்
இந்தியாவில் 5ஜி சேவையை விரைவில் தொடங்க டெலிகாம் நிறுவனங்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். ஜியோ மற்றும் ஏர்டெல் முதலில் இந்தியாவில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியாவின் முன்னேற்றம்
சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதில் டிஜிட்டல் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்டார். இந்த உரையில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவது குறித்து பேசினார்.

ஒவ்வொரு கிராமங்களுக்கும் இணைய சேவை
"5G-க்காக காத்திருந்தது முடிந்துவிட்டது" என பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதன்மூலம் இந்தியாவில் 5ஜி சேவை அதிவிரைவில் அறிமுகமாக இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதோடு இந்தியாவின் கிராமங்கள் தோறும் ஆப்டிகல் ஃபைபர் அணுகல் கிடைக்கும் எனவும் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் இணைய சேவை சென்றடையும் எனவும் உரையில் தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பயணித்து வருகிறோம் என்று குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, விவசாயம், கல்வியிலும் டிஜிட்டல் புரட்சி வரும் என தெரிவித்தார்.

விரைவில் 5ஜி சேவை தொடங்கும் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்கள்
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களும் விரைவில் 5ஜி சேவைகளை தொடங்க இருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்கள் கடந்த சில காலமாகவே 5ஜி சேவையை அறிமுகம் செய்ய முணைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல், மிக விரைவில் 5ஜி சேவைகளை நிறுவனம் அறிமுகப்படுத்தும் என குறிப்பிட்டார்.

மும்முரமாக செயல்படும் நிறுவனங்கள்
அதன்படி ஏர்டெல் 5ஜி சேவை இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் ஜியோ தனது 5G சேவைகளை விரைவில் அறிமுகம் செய்யும் என்பதை நிரூபிக்கும் வகையில் பல இடங்களில் 5ஜி நெட்வொர்க் சோதனையை நடத்தி வருகிறது.
அதேபோல் செப்டம்பர் 29 ஆம் தேதி நடக்க இருப்பதாக கூறப்படும் இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) தொடக்க விழாவில் பிரதமர் மோடி 5G சேவையை அறிமுகப்படுத்துவார் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முதல் மெட்ரோ நெட்வொர்க்
ஏர்டெல் மற்றும் ஜியோ இந்தியாவில் விரைவில் 5ஜி சேவையை தொடங்கும் என்பது ஏரத்தாள முடிவு செய்யப்பட்டு விட்டது. ஜியோ அதற்கான சோதனைகளையும் தொடங்கி நடத்தி வருகிறது. பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) இல் 5ஜி நெட்வொர்க்கை ஜியோ சோதனை செய்தது. மெட்ரோ நிலையத்தில் 5ஜி சோதனை செய்த இந்தியாவின் முதல் மெட்ரோ நெட்வொர்க் இதுதான்.

10 மடங்கு அதிக வேகம்
இந்த சோதனையில், ஜியோ 5ஜி இன் உச்ச பதிவிறக்க வேகம் 1.45Gbps ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 65Mbps பதிவேற்ற வேகத்தையும் பதிவு செய்திருக்கிறது.
1.45Gbps என்றால் எவ்வளவு வேகம் என்று தெரியுமா?. பெங்களூருவில் உள்ள ஜியோ 5ஜி நெட்வொர்க் வேகமானது 4ஜி நெட்வொர்க்கை விட குறைந்தது 10 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

விலை என்னவாக இருக்கும்?
5ஜி விலை ஆனது 4ஜி-ஐ விட அதிகமாக இருக்கும் என்பது அறிந்ததே. இருப்பினும் எவ்வளவு அதிகமாக இருக்கும் என்று வெளியான சில தகவல்களை வைத்து பார்க்கலாம். இது 4ஜி நெட்வொர்க் விலையை விட குறைந்தது 10% அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதாவது தினசரி 2 ஜிபி டேட்டா என்ற வீதத்தில் மாதாந்திர திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்கள் தற்போது செலவு செய்யும் பணத்தை விட கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டியது இருக்கும் என கூறப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470