சத்தமில்லாமல் சர்வதேச நீதிமன்றத்தில் ரூ.20,000 கோடி வரி வழக்கில் வோடபோன் வெற்றி.!
வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகைகளை வழங்குகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்வதில்லை, ஆனால் ஜியோ நிறுவனம் தொடர்ந்து கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அசராங்கத்திற்கு எதிராக சுமார் 12,000கோடிநிலுவைத் தொகையும், அதோடு ரூ.7900 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தொலைத்து தொடர்பு நிறுவனமானவோடபோன் தெரிவித்தது.

இதுகுறித்து வோடபோன் குழுமம் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தை 2016-ல் அணுகியது, இந்த நிலையில் வோடபோன் மீது இற்திய அரசு வரிச்சலுகை விதிப்பது, இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான முதலீட்டு ஒப்பந்தத்தை மீறுவதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்திய அரசாங்கம் வோடபோனிடமிருந்து அரசாங்கம் நிலுவைத் தொகை கோருவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்,அத்துடன் இந்த நிறுவனத்தின் சட்ட செலவுகளுக்கு இழப்பீடாக இந்தியா 40கோடி ரூபாய் இழப்பீடாக செலுத்த வேண்டும்என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக இதுகுறித்து வோடபோன் இந்தியா நிதியமைச்சகமும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ பதிலினை கொடுக்கவில்லை. பின்பு இந்த வழக்கில் கூறப்படும் 12,000கோடி நிலுவையும் 7900கோடி அபராதமும் இந்திய நிறுவனமான Hutchison Whampoa-லிருந்து, கடந்த 2007-லில் கையகப்படுத்தியதில் இருந்து உருவாகியது என்றும் கூறப்படுகிறது.

மேலும் அரசு தரப்பில் இந்த நிறுவனத்தினை கையகப்படுத்திய வோடபோன் தான் இதனை செலுத்த வேண்டும் எனவும் வாதிடப்பட்டது, அரசாங்கத்தின் நிலுவைத் தொகையை தீர்ப்பதற்கு சுப்ரீம் கோர்ட் மொபைல் நிறுவனங்களுக்கு 10ஆண்டுகள் அவகாசம் அளித்ததால் கடன்பட்டுள்ள தொலைத் தொடர்பு நிறுவனம் இந்த மாத துவகத்தில் சில நிவாரணங்களை பெற்றன. மேலும் சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது வோடபோன் நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ஏற்கனவே இந்நிறுவனம் பலத்த போட்டியின் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்திருந்த நிலையில், கடந்த சிலஆண்டுகளாகவே பெரும் நஷ்டத்தினை கண்டு வந்தது. இந்த நிலையில் தான் யுதுசு வழக்கும் வந்தது. இதன் காரணமாக
ஏற்கனவே கடன் பிரச்சனையில் இருந்த நிறுவனத்திற்கு இன்னும் சற்று அழுத்தத்தினை கொடுத்தது. இந்த நிலையில்அரசு சமீப வாரங்களுக்கு முன்பு தான் 10ஆண்டுகள் அனுமதி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications