2ஜி சேவை: முகேஷ் அம்பானி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வோடபோன் இயக்குநர்.!
ஜியோ நிறுவனம் அன்மையில் பல சாதனைகளை படைத்துவிட்டது என்றுதான் கூறவேண்டும். இந்நலையில் இந்தியாவை முழுமையான டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்றும், 2ஜி தொழில்நுட்பத்தில் இருந்து முற்றிலும் வெளியே வரவேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அன்மையில் கூறினார்.
இந்திய அலைபேசி தொலைதொடர்பு அமைப்பின் 25-வது ஆண்டுவிழாவையொட்டி, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோ இப்போது அதிகமாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வீடீயோவில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார் முகேஷ் அம்பானி, அதில் உலக நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்தில் கால்பதித்து இருக்கும் இந்த சூழலில், இந்தியாவில் 30கோடி மக்கள், 2ஜி செல்போன்களை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

எனவே அவர்களுக்கு முழுமையான டிஜிட்டல் புரட்சி சென்று சேரவில்லை எனவும், விரைவில் 2ஜி தொழில்நுட்பத்தில் இருந்து அனைத்து இந்தியர்களையும் அடுத்தக்கட்ட ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதான் பிரமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் முழுமையடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் 2ஜி சேவையை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்ற முகேஷ் அம்பானியின் கருத்துக்கு வோடபோன் ஐடியாவின்நிர்வாக இயக்குநர் ரவீந்தர் தக்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வோடபோன்ஐடியா நிர்வாக இயக்குநர் ரவீந்தர் தக்கர் அவர்கள் தெரிவித்தது என்னவென்றால் ஸ்மார்ட்போன்
இல்லாதவர்களுக்கு 2ஜி சேவை சிறப்பாக பயன்பட்டு வருகிறது. ஒரு பகுதி வாடிக்கையாளர்களுக்கு இது சிறப்பாகவும் மலிவான சேவையாகவும் உள்ளது.

மேலும் மூத்த குடிமக்கள் 2ஜி சேவையை விரும்புகிறார்கள்,சர்வதேச அளவிலும் 15சதவீத வாடிக்கையாளர் செலவு குறைவுபோன்ற காரணங்களால் இன்றளவும் 2ஜி சேவையை விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications