ஜியோவுடன் இணைந்து இணைப்பு புள்ளிகளை மும்மடங்காக உயர்த்தும் வோடபோன்..!
வோடபோன் இந்தியா நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து தனது இணைப்பு புள்ளிகளை மூன்று மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ள தாக அறிவித்துள்ளது.
"வோடபோன் இந்தியா எப்போதுமே பிற அனைத்து நெட்வெர்க்குகளுக்கும் இணைப்பு புள்ளிகளை வழங்கி கொண்டு வருகிறது, குறிப்பாக நியாயமான மற்றும் முறையான தேவைகளுக்கு உதவி வருகிறது. அது மேலும் தொடரும்" என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

"இந்திய தொலை தொடர்பு ஆணையத்தின் (டிராய்) வழிகாட்டல் மற்றும் ஜியோவின் வர்த்தக வெளியீட்டு தொடர்பான விளக்கம் ஆகியவைகளை தொடர்ந்து, வோடபோன் இந்தியா நிறுவனம் ஜியோவுடன் இணைந்து மூன்று மடங்கு இணைப்பு புள்ளிகளின் திறனை அதிகரிக்க முடிவு செய்துள்ளது"

"டிராய் மற்றும் ஜியோவிற்கு எதிராக எழுப்பட்டுள்ள பிரச்சினைகள் முறையாக மற்றும் விரைவில் தீர்க்கப்படும் என்று வோடபோன் நம்புகிறது" என்று வோடாபோன் கூறியுள்ளது.
மேலும் படிக்க :
ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா மீது புகார் அளித்த ரிலையன்ஸ் ஜியோ.!!
ஏர்டெல் - டூ - ஏர்செல் : டாக்டைம் மற்றும் டேட்டா கடன் பெறுவது எப்படி.?
ஜியோ 4ஜி ஆண்ட்ராய்டை பாஸ்வேர்ட் இன்றி அன்லாக் செய்வது எப்படி..?


Click it and Unblock the Notifications