Just In
- 8 hrs ago புது ரூல்ஸ்.. ஏப்ரல் 15 முதல் அமல்.. உங்க SIM கார்டுல இந்த சேவை கிடைக்காது.. ஜியோ, ஏர்டெல் கஸ்டமர்கள் கவனம்!
- 8 hrs ago சிக்குச்சு டா சீனா.. காஷ்மீர்ல கால் வச்சா காலி.. DRDO-வின் புதிய Anti-Tank ஏவுகணை.. அட்டாக் பண்ற விதமே வேற!
- 12 hrs ago அப்பட்டமா இருக்கே.. EVM என்கிற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாமா? தேர்தல் ஆணையம் விளக்கம்!
- 17 hrs ago ஆர்டர் போட்ருங்க.. 7700mAh பேட்டரி.. டால்பி அட்மாஸ்.. ஆஃபரில் Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?
Don't Miss
- News சென்னையை அதிர வைத்த குழந்தை கடத்தல்.. 4 மணிநேரத்தில் மீட்டது எப்படி? ஹீரோவான 2 ஆட்டோ டிரைவர்கள்!
- Sports IPL 2024 - அந்நிய மண்ணில் முதல் வெற்றி.. 8 புள்ளிகளை பெற்ற சிஎஸ்கே.. பட்டியலில் என்ன இடம்?
- Automobiles 31 கிமீ மைலேஜ் தரும் காரை அடிமாட்டு விலைக்கு விற்கும் மாருதி... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...
- Movies Actor Pugazh: தினமும் 50 பேருக்கு.. பாலா வழியில் உதவிகளை முன்னெடுக்கும் புகழ்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ள குரு சூரிய சேர்க்கை: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
- Finance நோ-காஸ்ட் இஎம்ஐகள் உண்மையிலேயே பலன் அளிக்குமா? அறிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
நஷ்டத்தில் இருந்தாலும் நாங்க கிங் தான்: Jio, airtel, bsnl போல் Vodafone அட்டகாச இலவச அறிவிப்பு!
வோடபோன் ஐடியா நிறுவனம் நஷ்டத்தில் நடந்து வருகிறது என அறிவித்தாலும் வாடிக்கையாளர்களுக்கான இலவச சேவையை பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போல் அறிவித்துள்ளது.
வோடாபோன் ஐடியா
வோடாபோன் ஐடியாவின் படி, நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் 2020 ஏப்ரல் 17 வரை நீட்டிக்கும். இது மட்டுமல்லாமல், வோடபோன் ஐடியா குறைந்த வருமானம் கொண்ட "குழுவை" சேர்ந்த கிட்டத்தட்ட 100 மில்லியன் பயனர்களின் அக்கவுண்டில் ரூ.10 மதிப்பிலான டாக்டைம் வரவையும் வழங்குவதாக அறிவித்துள்ளது
ஜியோ 100நிமிட இலவச அழைப்புகள்
வெளிவந்த அதிகாரபூர்வமான தகவலின் அடிப்படையில், நாட்டில் உள்ள அனைத்து ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கும் 100நிமிட இலவச அழைப்புகள் மற்றும 100எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும் என்றும், இந்த நன்மைகள் வரும் ஏப்ரல் 17வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாஷ்: ரயில், விமான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்., ஆனா ஒரு நிபந்தனை!
100நிமிட இலவச அழைப்புகள்
வெளிவந்த அதிகாரபூர்வமான தகவலின் அடிப்படையில், நாட்டில் உள்ள அனைத்து ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கும் 100நிமிட இலவச அழைப்புகள் மற்றும 100எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும் என்றும், இந்த நன்மைகள் வரும் ஏப்ரல் 17வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ,ஏடிஎம், எஸ்எம்எஸ்
கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் நாட்களில் வாடிக்கையாளர்கள் சில்லறை கடைகள் வழியாக ரீசார்ஜ் செய்வது மிகவும் கடினம், எனவே இதை கருத்தில் கொண்டு ஜியோ நிறுவனம் யுபிஐ,ஏடிஎம், எஸ்எம்எஸ், வாய்ஸ் கால்கள் போன்ற ரீசார்ஜ் செய்வதற்கு மாற்று சேனல்களை வழங்கியுள்ளது.
மக்கள் அனைவரும் வீடுகளில் வசிக்கும் சூழ்நிலை
மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டு உள்ளது, இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் வசிக்கும் சூழ்நிலை உள்ளதால், அவர்களுக்கு ஆதரவாக தொலைத் தொடர்பு நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
பிஎஸ்என்எல்: ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் கவலை வேண்டாம்
கொரோனா ஊரடங்கு உத்தரவால் பலரும் பொருளாதார ரீதியாலான சிரமத்தை அனுபவித்து வருகின்றனர், குறிப்பாக ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டாலும், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான சேவை ஏப்ரல் 20ம் தேதி வரை துண்டிக்கப்பட மாட்டாது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்என்எல்-ஐ தொடர்ந்து ஏர்டெல் எடுத்த முடிவு
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த உத்தரவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தற்பொழுது, ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏர்டெல்லின் 80 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்ட் பேக் செல்லுபடி காலத்தை தற்பொழுது ஏர்டெல் நிறுவனம் நீட்டிப்பு செய்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் உத்தரவுப்படி, வரும் ஏப்ரல் 17, 2020 வரை இந்த நீட்டிப்பு செல்லுபடியாகும்.
600-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்
600-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்
நாட்டில் தற்சமயம் 600-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர் என செய்திகளில் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது, கொரோனா பரவாமல் தடுக்க ஏப்ரல் 14 வரை Lockdown உத்தரவை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தனது அறிக்கையில்
கோவிட் -19 எனப்படும் கொரோனா தொற்றுநோயைத் தடுப்பதற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவாக நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் புத்தக வாசிப்பில் விருப்பமுள்ளவர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் Airtel E-Book பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள அனைத்து புத்தகங்களுக்கும் நாவல்களுக்கும் இலவசமாக படிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்திடம் ரூ.298-திட்டம்
அதிகளவில் வாசிப்பதை உறுதிப்படுத்த முயற்சியாகும். மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் சிறப்பான திட்டங்களைப் பார்ப்போம். ஏர்டெல் நிறுவனத்திடம் ரூ.298-திட்டம் உள்ளது,இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா,வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்.
அடுத்த இலவசத்தை அறிவித்த டாடா ஸ்கை நிறுவனம்! வாடிகையாளர்கள் மகிழ்ச்சி.!
ஏர்டெல் ரூ.698 திட்டம்
ஏர்டெல் நிறுவனம் ரூ.698-திட்டத்தையும் வைத்துள்ளது, இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற கால் அழைப்பு,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470