விவோ & குவால்காம் அறிமுகப்படுத்தும் மீயொலி கைரேகை ஸ்கேனிங் தொழில்நுட்பம்.!
குவால்காம் டெக்னாலஜிஸ் தற்போது விவோ எக்ஸ்பிளே 6 என்ற ஸ்மார்ட்போனுக்கு கீழ்-கைரேகை ஸ்கேனர் ஒன்றை அமைத்துதந்துள்ளது.!
தற்பொழுது நடைபெறும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் ஷாங்காய் 2017 இல், குவால்காம் மற்றும் சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் விவோவும் அடுத்த தலைமுறை மீயொலி கைரேகை ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Unlocking to new possibilities for your devices! Vivo proudly uncovers the latest Under Display Fingerprint Scanning Solution. #VivoMWC2017 pic.twitter.com/S0lISpZ2q5
— Vivo India (@Vivo_India) June 28, 2017
விவோ பொறுத்தமட்டில் செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது, மேலும் இவற்றில் புதிய மென்பொருள் மாற்றங்கள் கொண்டுவந்துள்ளது விவோ நிறுவனம். குவால்காம் மற்றும் விவோ நிறுவனங்கள் இனைந்து ஸ்மார்ட்போனில் தற்போது கைரேகை ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இவை ஸ்மார்ட்போன்களுக்கு மிகவும் பாதுகாப்பான அம்சங்கள் ஆகும்.

குவால்காம் டெக்னாலஜிஸ்:
குவால்காம் டெக்னாலஜிஸ் தற்போது விவோ எக்ஸ்பிளே 6 என்ற ஸ்மார்ட்போனுக்கு கீழ்-கைரேகை ஸ்கேனர் ஒன்றை அமைத்து தந்துள்ளது, மேலும் இவை பல்வேறு மென்பொருள் கொண்டு உருவாக்கப்பட்டது என குவால்காம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம்:
இந்த தொழில்நுட்பம் புதிய சென்சார் ஒஎல்இடி திரை வழியாக அமைக்கப்பட்டுள்ளது, மேலும் இவை மீயொலி ஒலி அலைகளை உருவாக்கும், இந்த ஒலி அலைகள் இப்போது கைரேகையை துல்லியமான 3டி படத்தை பிடிக்கின்றன. அதன்பின் இந்த சாதனத்தை இயக்கமுடியும்.

கைரேகை சென்சார்:
இந்த கைரேகை சென்சார் 1200 பவுண்டுகள் வரை ஒஎல்இடி டிஸ்ப்ளே அடுக்குகள் மூலம் ஸ்கேனிங் செய்யக்கூடியதாக இருக்கிறது, மேலும் முழுமையான பாதுகாப்பை ஸ்மார்ட்போனுக்கு தருகிறது.

விவோ நிறுவனம்:
விவோ நிறுவனம் தற்போது புதிய தொழில்நுட்ப முயற்சிகளை மேற்க்கொண்டுவருகிறது, இதன் மூலம் அதிக மக்கள் விவோ ஸ்மார்ட்போன்களை வாங்க வாய்ப்பு உள்ளது.

2018:
2018ஆம் ஆண்டில் கண்ணாடி மற்றும் மெட்டலுக்கான குவால்காம் கைரேகை சென்சர்கள் பல மொபைல் மாடல்களில் இடம்பெற அதிகவாய்ப்பு உள்ளது, மேலும் இவற்றில் பல்வேறு நன்மைகள் உள்ளது என குவால்காம் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications