சாம்சங் கவரில் விம்பார் சோப், இன்டெர்நெட்டில் பொருட்களை வாங்கும்போது கவனமாக இருங்க மக்களே...!
இன்டெர்நெட் குளறுபடிகள் பற்றி நீங்க மிறைய விஷயங்களை கேள்விப்பட்டிருப்பீங்க, அவற்றில் சில விஷயங்களை நம்புவதா வேண்டாமானு கூட குழம்பியிருப்பீங்க. இந்த வகையில சமீபத்தில ஒரு விஷயம் நடந்திருக்கு, அது என்ன என்று நீங்களே பாருங்க.
மும்பையை சேர்ந்த லக்ஷமிநாராயனன் கிருஷ்னமூர்த்தி ஸ்னேப்டீல் இணையதளத்தில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்திருந்தார், ஆனால் அவருக்கு கிடைத்து விம்பார் சோப்.

இதை பார்த்து முதலில் ஷாக் ஆன கிருஷ்னமூர்த்தி பின் தனக்கு கிடைத்த சோப்பை படம் பிடித்து பேஸ்புக்கில் உளவவிட்டார், எதிர்பார்த்ததை விட அது பேஸ்புக்கில் பிரபலமானது, சுமார் 20,000 முறை இந்த போஸ்ட் ஷேர் செய்யப்பட்டுள்ளது.
ஒரு வாரம் கழித்து ஸ்னாப்டீல் இதற்கு மன்னிப்பு கோரியதோடு நடந்த தவறுக்காக ஸ்மார்ட்போனின் விலையை முழுமையாக திரும்ப பெற்றது, இதையும் லக்ஷமி நாராயனன் பேஸ்புக்கில் தெரிவித்தார். விவகாரம் இதோடு முடியவில்லை அடுத்து ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் இவருக்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்தது.
அந்நிறுவனம் சார்பில் அனுப்பட்ட கடிதம் மற்றும் பொட்டலங்களில் கிருஷ்னமூர்த்தி முன்பதிவு செய்த ஸ்மார்ட்போன் மற்றும் விம்சோப்கள் இருந்தது. இதையும் கிருஷ்னமூர்த்தி பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications