ஈரான் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்: அதிரவிட்டார் டிரம்ப்.!
தற்போது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இதன் பிறகு மீண்டும் அந்த உத்தரவை உடனடியாக திரும்ப
தற்போது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இதன் பிறகு மீண்டும் அந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற்றார்.

ஈரான் மீது ஏன் அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளது என்றால், அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந் அமெரிக்கா போருக்கு ஆயத்தமானது. ஈரானை நிலை குலையை செய்ய வேண்டும் நோக்கில் தற்போது அமெரிக்கா சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், ஈரானால் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட முடியாது என்று கூறப்படுகின்றது.

அணு ஆயுத ஒப்பந்ததில் விலகியது:
ஈரான் அணு ஆயுத ஒப்பந்த்தில் இருந்து அமெரிக்கா விலகியது. இருநாடுகளும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதன் விளைவாக இருநாடுளுக்கும் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் உளவு விமானம் வீழ்த்தல்:
அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரான் அரசு சுட்டு வீழ்த்தியது. இதையடுத்து ஈரான் மீது டிரம்ப ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட்டர். பிறகு அந்த உத்தரவை திரும்ப பெற்றார்.

சைபர் தாக்குதல்:
இந்நிலையில், ஈரான் அணு ஆயுதத் திட்டங்களை முடக்கும் வகையில், இணைய வழி தாக்குதல் தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் மூலம் ஈரான் அணு ஆயுத திட்டத்திற்கு பயன்படுத்தும் கணினிகளை, அமெரிக்க ராணுவ இணையதள வல்லுநர்கள் முடக்கியதாகவும், இதனால் ஈரான் தொடர்ந்து அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட முடியாது, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார தடை:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஒப்புதல் பெற்ற பிறகே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஈரான் மீது, இதுவரை வேறு எந்த நாட்டுக்கும் விதிக்காத, கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கை:
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஒரு சில நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஒரு சில நாடுகள் இதுக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. டிரம்பின் அதிரடியான நடவடிக்கையால் ஈரான் தற்போது அதிர்ந்து போயியுள்ளது. இதை சரிசெய்யும் பணியிலும் ஈரான் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications