60,000 பேருக்கு வேலை! தமிழ் நாட்டிற்கு வரும் மிகப்பெரிய iPhone ஆலை! எந்த மாவட்டத்தில் தெரியுமா?
ஐபோன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் தரமான அம்சங்களுடன் தனித்துவமான வடிவமைப்பில் சாதனங்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது, அதேசமயம் இந்நிறுவனத்தின் சாதனங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

சீனாவில் நிலவி வரும் நெருக்கடி
அதேபோல் தற்போது சீனாவில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் அங்கு ஐபோன் உற்பத்தியானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது உலகம் முழுக்க பற்றாக்குறையைத் தூண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக மக்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி வெளிவந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சீனாவை மட்டுமே நம்பியிருக்க முடியாது
அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியில் பாதிக்கும் மேல் சீனாவில் செய்யப்பட்டு வந்தது. தற்போது சீனாவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்ற நிலையில் தான் இந்தியாவில் தனது உற்பத்தியினை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

60,000 பேருக்கு வேலை
அதேபோல் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் சீரிஸ் 14ஐ இந்தியாவில் உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தமிழக மக்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியைக் கூறியுள்ளது. அதாவது தமிழகத்தின் ஓசூர் அருகில் பிரம்மாண்ட ஆலை அமையவுள்ளதாகவும், இதன் மூலம் 60,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
மேலும் இது குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தது என்னவென்றால், ஆப்பிள் ஐபோன்கள் இப்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
குறிப்பாக ஓசூர் அருகில் மிகப்பெரிய ஐபோன்கள் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு மொத்தம் 60,000 பணியமர்த்தப்படவுள்ளனர். இதில் முதல் 6000 பணியாளர்கள் ராஞ்சி மற்றும் ஹஜாரிபாக் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஆவார்கள். இவர்களுக்கு இதற்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

குறிப்பாக ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான பணியை, டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த ஆலை தான் ஓசூரில் உள்ளது. அதேபோல் இந்தியாவில் ஏற்கனவே ஐபோன் உற்பத்தியானது விஸ்ட்ரான், பாக்ஸ்கான், பெகட்ரான் நிறுவனங்கள்
உற்பத்தி செய்து வருகின்றன.

சிறந்த வாய்ப்பாக அமையும்
இந்நிலையில் ஐபோன் பாகங்களை முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் உற்பத்தி செய்யவுள்ளது ஆப்பிள் நிறுவனம். குறிப்பாக இதன் மூலம் இந்திய நிறுவனங்களின் மீதான நம்பிக்கை மேம்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகும். மொத்தத்தில் தமிழக இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர பல வெளிநாட்டு நிறுவனங்கள் கூட இந்திய சந்தையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றன. எனவே இதனால்தான் அந்நிறுவனங்கள் உற்பத்தியை இங்கேயே தொடங்கியும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications