சுந்தர் பிச்சையால் கூகுள் நிறுவனத்துக்கு வருமானம் எவ்வளவு தெரியுமா?
கூகுள் இணைதள தேடல் 1998ல் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் அமெரிக்காவில் 1998ம் ஆண்டு துவங்கப்பட்டது. உலகின் முன்னணி இணைதள தேடல் பொறி நிறுவனமாக கூகுள் இருக்கின்றது. சமீபத்தில் தனது 20வது ஆண்டு
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் போது சுந்தர் பிச்சை குரோம் என்று புதிய ப்ரவுசர் கண்டுபித்தார். இதன் பிறகு கூகுள் நிறுவனத்திற்கு சிஇஓவாக அவர் நியமிக்கப்பட்டார். பிறகு பொறுப்ப ஏற்றுக்கொண்ட பிறகு பல்வேறு யுக்திகளை செயல்படுத்தி வருகின்றார்.

மேலும், கூகுள் வெப்சைட்டில் பல்வேறு வழிகளில் விளம்பரங்களை சந்தைபடுத்தும் முறைகளை கண்டறிந்தார். பிறகு இதை உத்துவேகத்துடன் செயல்படுத்த வருகின்றார். தற்போது சுந்தர் பிச்சையால், கூகுள் நிறுவனத்துன் எவ்வளவு வருமானம் கிடைக்கின்று என்று தகவல் வெளியாகி உள்ளது. இதை பார்க்கும் போது நமக்கே பிரமிப்பை ஊட்டுகின்றது.

20ம் ஆண்டு விழா:
கூகுள் இணைதள தேடல் 1998ல் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் அமெரிக்காவில் 1998ம் ஆண்டு துவங்கப்பட்டது. உலகின் முன்னணி இணைதள தேடல் பொறி நிறுவனமாக கூகுள் இருக்கின்றது. சமீபத்தில் தனது 20வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

அடிமாடு விலைக்கு போக இருந்த கூகுள்:
1998ம் ஆண்டில் கூகிள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் யாஹூவை அணுகினர். அதன் பேஜ் தரவரிசையை
(இந்திய மதிப்பில் ரூ. 7,09,45,000) $ 1 மில்லியனுக்கும் குறைவாக வாங்க பேரம் பேசப்பட்டது. கூகுள் நிறுவனர்கள் இருவரும் ஸ்டான்ஃபோர்டில் படிப்பில் கவனம் செலுத்த விரும்பினர். பிறகு, பல்வேறு யுத்திகளை முன்னேறியது.

2ம் முறை விற்க முற்பட்ட கூகுள்:
கடந்த 2002ம் ஆண்டு மீண்டும் ஒருமுறை யாகூவிடம் $3 பில்லியனுக்கு (இந்திய ரூபாயில் 2,12,82,75,00,000) விற்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டது. பிறகு யாகூ நிறுவனத்திடம் இதுகுறித்து பேசப்பட்டது. அப்போது யாகூ தலைமை டெர்ரி செசெமல் இந்த வாய்பை மறுத்துவிட்டார். தற்போது யாகூ நிறுவனம் வெரிசோன் நிறுவனத்திற்கு விற்று சென்றுவிட்டனர்.

கூகுளின் வளர்ச்சி:
கூகுள் நிறுவனம் அதன் பிறகு படிப்படியாக வளர்ச்சியடைந்தது. தற்போது கூகுள் இணையத் தேடலுடன் கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்ட்கள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப், கூகுள் டிரைவ், கூகுள் டியோ போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

சுந்தர் பிச்சை சிஇஓ:
2004ம் ஆண்டு பணியில் சேர்ந்தது முதல் கூகுள் நிறுவனத்திற்கு வளர்ச்சிக்கும் மேற்பாட்டிற்கும் பாடுபாட்ட சுந்தர் பிச்சையை அந்த நிறுவனம் கடந்த 2015 ஆகஸ்ட் 10ம் தேதி கூகுளின் சிஇஓவாக பணியில் அமர்த்தி அழகு பார்த்தது. கூகுள் குரோமை கொண்டு வந்த பிறகு அரசு வளர்ச்சி அடைந்தது.

விளம்பரம் மூலம் வருமானம்:
பல்வேறு விளம்பரங்களையும் கூகுள் நிறுவனத்தில் வெளியிட்டு நிறுவனத்திற்கு லாபம் கொண்டும் வரும் நோக்கில் செயல்பட்டவர் சுந்தர் பிச்சை. இதைத்தொடர்ந்து கூகுளின் முதன்மை நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தையும் கவனித்து வந்தார்.

தற்போது வருமானம்:
கூகுள் நிறுவனம் தற்போது இரண்டாம் கால்பகுதியில் ஈட்டிய வருமானம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் முதன்மை நிறுவனமான ஆல்பாபெட் 26.24 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளது. இதே காலாண்டில் கூகுளின் விளம்பரங்கள் 23% அதிக வருமானம் ஈட்டியுள்ளது.

சுந்தர் பிச்சையால் அதிகரிப்பு:
சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் கூகுளின் வருமானம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இரண்டாம் காலாண்டில் கூகுள் நிறுவன வருமானம் 26% அதிகரித்து 23.3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications