Home
News

உக்ரைன் விவகாரம்: ஆப்பிள் நிறுவனம் உதவி செய்தால் நன்றாக இருக்கும்: டிம் குக்கிற்கு உக்ரைன் அமைச்சர் கடிதம்.!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். மேலும் இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின. தொடர்ந்து இன்று 3-வது நாளாக போர் நீடிக்கிறது.இரு தரப்பிலும், போரை முன்னிட்டு ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

க ரஷிய படைகள் உக்ரைன்

குறிப்பாக ரஷிய படைகள் உக்ரைன் தரைநகர் கீவ் நோக்கி முன்னேறி வருகின்றன எனவும், அந்த நகரின் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு
சத்தங்கள் கேட்டு வருகின்றன எனவும் கூறப்படுகிறது. மேலும் உக்ரைன் தரைநகர் கீவ்-வை பாதுகாக்க உக்ரைன் மக்கள் ஆயுதங்களுடன்
வலம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 உக்ரைன் துணை பிரதமர் மற்றும்

இந்நிலையில் உக்ரைன் துணை பிரதமர் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி மிகாலியோ ஃபெடரோவ் என்பவர் ஆப்பிள் தலைமை தலைமைசெயல் அதிகாரி டிம் குக்கிடம் ரஷ்ய ஃபெடரேஷனில் ஆப்பிள் சேவைகள் வழங்குவதை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது உக்ரைனை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவில் ஆப்பிள் சேவைகள் மற்றும் சாதனங்களை விற்பனை செய்வதை
நிறுத்த வேண்டும். பின்பு ஆப் ஸ்டோர் சேவையையும் ரத்து செய்ய வேண்டும் என தொழில்நுட்ப மந்திரி டிம் குக்கிற்கு எழுதி இருக்கும்கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இதே தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டிலும் பதிவிட்டு இருக்கிறார் என்பதுகுறப்பிடத்தக்கது.

ஆப் ஸ்டோர் சேவையை நிறுத்துவதன்

குறிப்பாக ஆப் ஸ்டோர் சேவையை நிறுத்துவதன் மூலம் அவர்களின் தகவல் தொடர்பை துணடிக்க முடியும் என நம்புகிறார். அதேபோல்
உக்ரைனில் நடைபெற்று வரும் சூழல் குறித்து தான் மிகவும் வருந்துவதாக டிம் குக் தெரிவித்து இருந்தார். குறிப்பாக ஆப்பிள் நிறுவனம்
தொடர்ந்து மனித நேயமிக்க முயற்சிகளை தொடர்ந்து வழங்கும் எனத் தெரிவித்தார். ஆனாலும் உக்ரைன் தொழில்நுட்ப மந்திரியின்
கோரிக்கைக்கு டிம் குக் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

 ஸ்வீடன் அரசு உக்ரைனுக்கு ராணுவ

சமீபத்தில் ஸ்வீடன் அரசு உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக தகவல் வெளவந்துள்ளது. அதன்படி தொழில்நுட்ப ரீதியலான உதவிகளை ஸ்வீடன் அரசு செய்து கொடுத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஏவுகணைகள் உக்ரைனின் முக்கியமான

ரஷ்யாவின் ஏவுகணைகள் உக்ரைனின் முக்கியமான இடங்களை நோக்கி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன. பின்பு ரஷ்யாவின் போர் விமானங்கள் உக்ரைனுக்குள் தாழ்வான உயரத்தில் பறந்து கொண்டிருப்பதாகவும், இந்த இக்கட்டான சுழலை மூன்றாம் உலகப் போர் என்றேஅனைவரும் கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மிகவும் பரபரப்பான சூழலில், உக்ரேனுக்கு ஆதரவாக உலக நாடுகளைச் சேர்ந்த ஹேக்கர் குழு ஒன்று கைகோர்த்துள்ளது. இந்த குழு ரஷ்யா மீது சைபர் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக இதன் முதல் கட்டமாக ரஷ்யாவின் ஃபெடரல் ஆன்டிமோனோபோலி சேவையை Anonymous எனப்படும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வலைதளப்பக்கத்தை பல நாடுகளின் பயன்பாட்டர்களால் பயன்படுத்த இயலவில்லை.

தொடார்ந்து ரஷ்யாவின் அரசு

இதை தொடார்ந்து ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சியான RT news, அரசு வலைதளங்களை இந்த ஹேக்கர்ஸ் குழு இணைய தாக்குதலை நடத்தியுள்ளது. பின்பு சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையதளங்களில் சில வேகம் குறைந்தன என்றும், மற்றவை செயல்படவில்லை என்று தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பு இது தொடர வேண்டாம் என்றால் உடனே போரை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Ukrainian minister has appeals to Tim Cook to block access to the App Store in Russia: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X