இனி டிரோன் பறக்க விட தடை: குட்டீஸூக்கு கூடவா?
உலகம் முழுக்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிரோனை பொழுது போக்கு பயன்படுத்தி வருகின்றனர். வானில் பறக்க விட்டு வீடியோ எடுத்து மகிழ்கின்றனர்.
விஞ்ஞான உலகத்தில் அனைவரும் சிறகடித்து பறந்து வருகிறோம். எதையும் விரைவாகவும் முடிக்கவும் சுலபமாக கையாளும் வகையில் தொழில் நுட்பம் வளர்ந்த விரிந்து கிடக்கிறது.

இந்த தொழில் நுட்ப வளர்ச்சியே கற்பனைகளுக்கு பல்வேறு வடிவம் கொடுத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

டிரோன் என்றால் என்ன?
டிரோன் என்றால் விமானத்தின் வால்பகுதி போல், நான்கு திசைகளிலும் ஒரே சேராக நீண்டு இருக்கும். அதன் மீது பறக்கும் வகையில் சிறிய காற்றாடிகள் மேல் நோக்கி இருக்கும். இந்த டிரோனின் கீழ் பகுதியில், அதிநவீன கேமரா பொறுத்தப்பட்டு இருக்கும். அதன் மூலம் உயரத்தில் டிரோனை பறக்க விட்டு வீடியோ எடுக்கலாம். இதை பூமியில் இருந்து ரிமோட் மூலம் இயக்கலாம்.

டிரோன்கள்:
இன்று டிரோன்கள் உதவி இல்லாமல், ராணுவம், சினிமா, காவல், ஊடகம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளால் எதுவும் இயங்க முடியாது என்று சொல்லக் கூடிய அளவுக்கு டிரோன் தொழில்நுட்ப பயன்பாடு இருக்கிறது.

பொழுது போக்கு:
உலகம் முழுக்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிரோனை பொழுது போக்கு பயன்படுத்தி வருகின்றனர். வானில் பறக்க விட்டு வீடியோ எடுத்து மகிழ்கின்றனர். மேலும், மலையேற்ற பயிற்சிக்கும் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

விபத்து அபாயம்:
டிரோன்களை அனைவரும் இயக்கும் போது, ஒரு சிலர் விமான நிலையம் அருகே சென்று டிரோன்களை படம் எடுக்கின்றனர். இதனால் விமானங்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குட்டீஸ்கு வந்த சோதனை:
18 வயதுக்கு குறைவானவர்களும், மேற்பட்வர்களும் விமான நிலையத்தில் அருகே 400 அடிக்கு மேல் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

0.55 பவுண்டுகள்:
0.55 பவுண்டுகள் எடையுள்ள டிரோன் விமான நிலையத்தின் அருகே பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று லண்டன் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஆகையால் அந்த ஊரில் இருப்பர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications