மாணவர்களுக்கு ஆதார் வழங்க 200 கோடி ரூபாய் செலவில் ஆதார் இயந்திரம்: அரசின் சலுகை உடனே கிடைக்குமா?
குறிப்பாக மாணவர்களுக்கு ஆதார் வழங்குவதற்காக, தாலுகா வாரியாக 200கோடி ரூபாய் செலவில் ஆதார் இயந்திரம் அமைக்க ஆதார் ஆணையம் முன்வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டள்ளது.
ஆதார் பொறுத்தவரை அனைத்து இடங்களிலும பயன்படும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும், ஆனாலும் சில இடங்களில் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்றவை அதிகமாக பயன்படுத்தப் படுகிறது.

குறிப்பாக மத்திய மாநில அரசிக் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற நிலை தற்போது உள்ளது. ஆனால் இந்த சேவைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும், மத்திய அரசு செவிசாய்க்காமல் உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

200 கோடி ரூபாய் செலவில்:
இந்நிலையில் மாணவர்களுக்கு ஆதார் வழங்குவதற்காக தாலுகா வாரியாக 200 கோடி ரூபாய் செலவில் ஆதார் இயந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆதார் எண் அவசியம்
மேலும் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் அவசியம் என்று ஆதார் தெரிவித்திருந்தது, இதனால் அதார் அட்டை இருந்தால்
தான் மாணவர்கள் பள்ளியல் சேர முடியும் என்றும், ஆதார் இல்லாத மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க மறுப்பதாகவும் நாடு முழுவதும் சில புகார்கள் வந்தன.

மாணவர்களை அனுமதிக்க வேண்டும்:
இதனை தொடர்ந்து ஆதாரை காரணம் காட்டி மாணவர்களை பள்ளிகளில் சேர்க்காமல் இருப்பது குற்றம் என்றும், அதற்கு பதிலாக வேறு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொண்டு மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் ஆதார் ஆணையம்
சுற்றறிக்கை அனுப்பியது.

தாலுகா
குறிப்பாக மாணவர்களுக்கு ஆதார் வழங்குவதற்காக, தாலுகா வாரியாக 200கோடி ரூபாய் செலவில் ஆதார் இயந்திரம் அமைக்க
ஆதார் ஆணையம் முன்வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டள்ளது. பின்பு தாலுகாவுக்கு இரண்டு வீதம் நாடு முழுவதும் ஆதார்
இயந்திரங்கள் வழங்கப்பட்டு, மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநில நிர்வாகம்
மேலும் இதற்கான தொகை 200 கோடி ரூபாயை மாநில அரசுக்கு வழங்கப்படும் என்றும், அந்தந்த மாநில நிர்வாகம் தங்கள் வசதிக்கு ஏற்றார் போன்று, தபால் நிலையங்கள், தாலுகாக்கள், பள்ளிகளில் ஆதால் இயந்திரம் அமைத்து மாணவர்களுக்கு ஆதார் வழங்கலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications