UIDAI புதிய Aadhaar விதிகள்.. பேங்க் முதல் சிம் வரை கட்டாயம்.. வந்தது ஆதார் டேட்டா வால்ட்.. என்னென்ன மாறுது?
யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது ஆதார் தகவல்களை (Aadhaar Details) கையாளும் அனைத்து நிறுவனங்களுக்கும் - புதிய கட்டாய நடைமுறை (New Mandatory Process) ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அது ஆதார் டேட்டா வால்ட் (Aadhaar Data Vault) ஆகும்.
யுஐடிஏஐ அறிமுகம் செய்து உள்ள இந்த புதிய நடைமுறையின் கீழ் - ஆதார் விவரங்கள் ஆனது ஏடிவி (ADV) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆதார் டேட்டா வால்ட் (Aadhaar Data Vault) எனப்படும் பாதுகாப்பான டிஜிட்டல் அமைப்பின் கீழ் சேமிக்கப்பட வேண்டும்.

ஆதார் தகவல்களை கையாளும் நிறுவனங்கள் என்றால் - வங்கிகள் (Banks), என்பிஎப்சி (NBFC) என்கிற நான்-பேங்கிங் பைனான்சியல் கம்பெனிகள் (Non-Banking Financial Companies), டெலிகாம் நிறுவனங்கள் (Telecom Operators), நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் (Fintechs) மற்றும் அரசு ஏஜென்சிகள் (Government agencies) உட்பட அனைத்தும் இதில் அடங்கும்.
இதன்கீழ் ஆதார் சட்டம், 2016 இன் கீழ், அங்கீகாரம் அல்லது இகேஒய்சி சரிபார்ப்புக்காக ஆதாரை பயன்படுத்தும் ஒவ்வொரு கோரிக்கை நிறுவனமும் (Requesting Entity - RE) ஒரு பெட்டகத்தை அமைக்க வேண்டும். ஆதார் எண்கள் அல்லது ஆதார் தொடர்புடைய தரவை சேமிக்கும் எந்தவொரு நிறுவனமும் அந்த தகவலை பாதுகாப்பான பெட்டகத்திற்கு நகர்த்த வேண்டும்.
ஆதார் டேட்டா வால்ட் என்றால் என்ன? ஆதார் டேட்டா வால்ட் என்பது பெயர், பிறந்த தேதி, முகவரி, இமெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பர் போன்ற மக்கள்தொகை விவரங்களை உள்ளடக்கிய ஆதார் எண்கள் மற்றும் இகேஒய்சி எக்ஸ்எம்எல் (eKYC XML) கோப்புகள் போன்ற முக்கியமான தகவல்களுக்கான பிரத்யேக மறைகுறியாக்கப்பட்ட சேமிப்பக அமைப்பு (Encrypted storage system) ஆகும்.
இந்த அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது? ஒரு நிறுவனத்தால் சேமிக்கப்படும் ஒவ்வொரு ஆதார் எண்ணும் ஒரு தனித்துவமான குறிப்பு விசையால் (unique reference key) மாற்றப்படும். உண்மையான எண் பெட்டகத்திற்குள் குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கீகாரம் இல்லாமல் அதை பார்க்கவோ அல்லது பிரித்தெடுக்கவோ முடியாது. பல ஆப்களில் இந்த தரவு பயன்படுத்தப்பட்டாலும் கூட, இது தனியுரிமையை (Privacy) உறுதி செய்கிறது.
ஆதார் டேட்டா வால்ட் ஆல் என்ன பயன்? ஆதார் டேட்டாவை ஒரு தடைசெய்யப்பட்ட அணுகல் களஞ்சியத்தில் (Restricted-access repository) வைத்திருப்பதன் மூலம், இந்த அமைப்பு பல தரவுத்தளங்களில் நகலெடுப்பதை தடுக்கிறது மற்றும் தரவு மீறல்கள் (data breaches) அல்லது அடையாள திருட்டு (identity theft) அபாயங்களை குறைக்கிறது.
மேலும் ஆதாரின் டிஜிட்டல் தடயத்தை குறைப்பதற்கும், அணுகல் மீதான கடுமையான கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்கும் கூட ஆதார் டேட்டா வால்ட்டின் முக்கிய அம்சங்கள் பயன்படும். அதென்ன அம்சங்கள்?
1. ஆதார் எண்கள் மற்றும் இணைக்கப்பட்ட தரவின் முழுமையான குறியாக்கம்
2. ஒவ்வொரு அணுகல் முயற்சியையும் கண்காணிக்க தணிக்கை தடங்கள்
3. ஆதார் தகவல்களை கையாளும் நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை இணக்கம்
மேலும் ஆதார் பயனர்களுக்கு, இந்த மாற்றம் ஒரு வலுவான பாதுகாப்பையும் சேர்க்கிறது. கேஒய்சி அல்லது சரிபார்ப்புக்காக ஆதார் பகிரப்படும்போது, விவரங்கள் மறைகுறியாக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே சேமிக்கப்படும். ஆதார் பிடிஎப்-கள் அல்லது இகேஒய்சி கோப்புகளை லோக்கலில் சேமிக்க முடியாது என்றும் அவை பெட்டகத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் யுஐடிஏஐ தெளிவுபடுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications