14 முறை சவாரி செய்ய மறுக்கப்பட்ட பார்வையற்ற பெண்.. 1.1 மில்லியன் செலுத்த நீதிமன்றம் UBERக்கு உத்தரவு..
கலிபோர்னியாவில் வசிக்கும் லிசா இர்விங் என்ற பார்வையற்ற பெண்ணுக்கு Uber நிறுவனம் சுமார் 1.1 மில்லியன் டாலர் தொகையைச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. பார்வையற்ற பெண் தனது வழிகாட்டி நாயுடன் சவாரி செய்ய மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பெண் நிராகரிக்கப்பட்ட ஓட்டுநர்களால் ஒரு டஜன் தனி சந்தர்ப்பங்களில் சிக்கித் தவித்து அவதிக்கு ஆளாகியுள்ளார் என்று வழக்கு தொடரப்பட்டது.

1.1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க நீதிமன்றம் Uberக்கு உத்தரவு
இதற்கான முடிவாக 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏன் இவர் 14 முறை நிராகரிக்கப்பட்டார் தெரியுமா? பல சந்தர்ப்பங்களில் இந்தப் பெண் அவர் வேலையைத் தவறவிட்டதாகவும், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தவறவிட்டதாகவும், கிறிஸ்துமஸ் ஈவ் தேவாலய சேவைகளைத் தவறவிட்டதாகவும், இருளில், மழையிலும் தவிக்கவிடப்பட்டதாகவும், உபர் ஓட்டுநர்களால் பிற அவமானங்களை சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பார்வையற்ற பெண் மற்றும் நாயை டாக்சியில் ஏற்ற மறுக்கப்பட்ட காரணம்
இவரை டாக்சியில் ஏற்ற மறுக்கப்பட்டதற்குக் காரணமாக உபெர் ஓட்டுநர்கள் அவரின் வழிகாட்டி நாயைக் குறையாகச் சொல்லியுள்ளனர். சிலர் பார்வையற்ற பெண் என்பதையும் மறந்து அப்பெண்ணை இழிவாகவும் பேசியுள்ளனர். 14 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவரையும் இவரின் வழிகாட்டி நாயையும் சுமக்க மறுத்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சவாரிகள் மறுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவளை அழைத்துச் செல்ல வந்த சில ஓட்டுநர்கள் அவளையும் அவளுடைய சேவை நாய் பெர்னியையும் நோக்கி துஷ்பிரயோகம் செய்ததாக லிசா இர்விங் கூறியுள்ளார்.

1.1 டாலர் என்ன கணக்கில் வழங்கப்பட்டது?
அவரது வழக்கறிஞர்களால் ஆன்லைனில் வெளியிடப்பட்ட நடுவர் நிலவரப் படி, அவருக்கு 324,000 டாலர் இழப்பீடு பெற்றுத்தரப்பட்டது என்றும், அதே நேரம் சுமார் 800,000-க்கும் அதிகமான டாலர் வழக்கறிஞர் கட்டணம் மற்றும் நீதிமன்ற செலவுகளுக்காக வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுப் படி Uber நிறுவனம் அந்த பெண்ணிற்குச் சேர வேண்டிய தொகையை மரியாதையை உடன் கொடுத்துள்ளது. இது பற்றி உபரின் ஒரு செய்தித் தொடர்பாளர், கூறுகையில்,

'இதற்கு' நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று uber பேட்டி
'பார்வையற்ற பயணிக்காக இந்த தொகையை வழங்கும் உதவியில் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது என்று கூறியுள்ளார். அதேபோல், உபரின் தொழில்நுட்பம் பார்வையற்றோரைக் கண்டுபிடித்து சவாரிகளைப் பெற உதவியது என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்." உபெர் பயன்பாட்டைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் சேவை விலங்குகளுடன் ரைடர்ஸுக்கு சேவை செய்வார்கள் மற்றும் அணுகல் மற்றும் பிற சட்டங்களுக்கு இணங்குவர் என்று உறுதிப்படுத்திக்கொள்கிறோம்.

இதற்கு முன்பு 2.6 மில்லியன் டாலர் செலுத்திய உபர்
மேலும் நிறுவனம் இது தொடர்பான கல்வியை ஓட்டுனர்களுக்கு வழங்கும். அந்த பொறுப்பில் இனி நிறுவனம் ஈடுபடும் என்றும் கூறியுள்ளார். எங்கள் அர்ப்பணிப்புக் குழு ஒவ்வொரு புகாரையும் கவனித்துத் தகுந்த நடவடிக்கை எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பார்வையற்றோர் மற்றும் அவர்களின் வழிகாட்டி நாய்களுக்குப் பாகுபாடு காட்டியதற்காக 2014 ஆம் ஆண்டில் உபர் மீது வழக்குத் தொடரப்பட்டது, மேலும் 2016 ஆம் ஆண்டில் ஒரு தீர்வாக 2.6 மில்லியன் டாலர் செலுத்த ஒப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications