இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 20நபர்களின் உயிரை காப்பாற்றியது.! எப்படி தெரியுமா?
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருளை விட உயர் தரத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் தயார் செய்யப்படுகிறது. மேலும் சாம்சங் நிறுவனத்தின் ஸமார்ட்போன் மாடல்கள் இந்திய அளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

20நபர்களின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம்
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சாம்சங் வாட்டர் ரெசிஸ்டண்ட் ஸ்மார்ட்போன் மூலம் 20நபர்களின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் நிகழந்து, இந்த செய்தி நாடு முழுவதும் வைரலாகி உள்ளது.

லிப்பைன்ஸ் நாட்டில் சிபு மாகாணம்
லிப்பைன்ஸ் நாட்டில் சிபு மாகாணம் என்ற சிறிய தீவு பகுதி அருகே சுற்றுலா தளம் உள்ளது, இங்கு பயணிகள் படகு சவாரி செய்யும் வசதியும் உள்ளது, இதில் 16பேர் வெளிநாட்டினரும். 4பேர் உள்நாட்டினரும் ஆவர். இந்நிலையில்
படகு சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நீரில் மூழ்கி தத்தளித்தனர்
படகு கவிழ்ந்து அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர், உதவிக்கு அருகில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது, தொடர்ந்து பயணிகள் தங்களது செல்போனை எடுத்து போன் செய்ய முயன்றனர்.ஆனால் செல்போன் நீரில் மூழ்கியதால் அனைத்தும் செயலிழந்து போனது.

வாட்டர் ரெசிஸ்டண்ட் போனாகும்
இக்கட்டான சூழலில் ஜிம் எம்டி என்ற கனடா நாட்டை சேர்ந்தவர் தனது சாம்சங் போனை எடுத்து பாரத்துள்ளார், அவர் வைத்திருந்த சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டண்ட் போனாகும்.

நன்றாக வேலை செய்தது
மேலும் நீரில் மூழ்கியபோதும், எந்தவித தங்குதடையின்றி சாம்சங் கேலக்ஸி எஸ்8 நன்றாக வேலை செய்தது, உடனே சுதாரித்துக் கொண்ட அவர், அவசர உதவிக்கு போன் செய்து நிலைமைய உடனே எடுத்துக கூறினார்.

அனைவரும் காப்பாற்றப்பட்டனர்
பின்று இந்த தகவல் குறித்து சம்பவ இடத்துக்கு உடனே வந்த மீட்பு படையினர், நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 20பேரையும் பத்திரமாக மீட்டனர், எல்லா ஸ்மார்ட்போன்களும் செயலிழந்த நிலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் மட்டும் அருமையாக இயங்கியதால் அனைவரும் காப்பாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications