கூகுள் அறிவியல் கண்காட்சி இறுதியில் இரண்டு இந்திய இளைஞர்கள்..!
கூகுள் நிறுவனத்தின் ஆறாவது "கூகுள் அறிவியல் ஆண்டு 2016"-ன் இறுதி போட்டிக்கு உலகம் முழுவதிலும் இருந்து கலந்து கொண்ட 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

வெள்ளியன்று அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அறிவிப்பின் கீழ் இரண்டு இந்தியர்களுக்கும் 50,000 டாலர்களுக்கான உதவித்தொகை உறுதி செய்யப்பட்டது, அதனை தொடர்நது இறுதி போட்டியில் பங்கேற்கின்றனர்.

ஆழமான கற்றல் வழிமுறைகள் கொண்ட நினைவகத்திற்கு உதவுவதற்காக ஒரு நாவல் வழி கற்றல் யோசனையை வழங்கிய பெங்களூரின் தேசிய பொது பள்ளியைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய ஷிரியன்க், "நெல் அமைப்பு தானியக்க நீர் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு " உருவாக்குவதில் கவனம் செலுத்தும் திட்டத்தை வழங்கியும் ஹைத்ராபாத்தின் சாது வாஸ்வானி சர்வதேச பள்ளியை சேர்ந்த 15 வயது நிரம்பிய மான்ஸா பாத்திமா ஆகிய இருவரும் தான் இந்தியாவை சேர்ந்த இறுதி போட்டியாளர்கள் ஆவார்கள்.

அனைத்து 16 இறுதிப்போட்டியாளர்களும் கலிபோர்னியாவில் அமைந்துள்ள சான்டா கிளாரா மலை காண் நகரத்திற்கு தங்கள் குடும்பங்களுடன் பயணத்து சென்று செப்டம்பர் 27 , 2016 அன்று நிகழும் விழாவில் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்பட்டு பரிசு பெறுவர்.
மேலும் படிக்க :
வாட்ஸ்ஆப் புது அப்டேட் புது அம்சங்கள் : அப்டேட் பண்ணிட்டீங்களா??
குவாட்ரூட்டர் பிழை, யாரும் பயம் கொள்ள வேண்டாம் : கூகுள்..!


Click it and Unblock the Notifications