ஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.! பாதுகாப்பு குறைபாடு.!
ட்விட்டர் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை சேர்த்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம்; கொண்டுவரும் புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு
குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆண்ட்ராய்டு தளங்களில் ட்விட்டர் செயலியை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் சார்பில் எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டது. வெளிவந்த எச்சரிக்கை தகவலின் படி பயனர்கள் உடனே தங்களது ட்விட்டர் செயலியை அப்டேட் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு குறைபாடு பெரும்பாலும் ஆண்ட்ராய்டு 8 மற்றும் 9 வெர்ஷன்களில் உள்ள ட்வட்டர் செயலியை பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு குறைபாடு பயனர்களின் டிஎம் அதாவது தனிப்பட்ட குறுந்தகவல் விவரங்களை அமல்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறதுது. இருந்தபோதிலும் இவற்றாறு நடந்ததற்கு எந்த ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை.

இந்த பிழைக்கு அக்டோபர் 2018 வாக்கில் அப்டேட் வெளியிடப்பட்டதாக ட்விட்டர் தெரிவிக்கப்பட்டள்ளது, ஆனால் ஆண்ட்ராய்டு 8 மற்றும்9 வெர்ஷன்களில் பாதித்து இருப்பதால் இந்த குறைபாடு பலரது தனிப்பட்ட விவரங்களை கேள்விக்குறியாக்கி இருக்கலாம் என தெரிகிறது.

மேலும் பிழையை சரி செய்துவிட்டு, அதன்பின்பு பயனர்களுக்கு தகவல் வழங்கலாம் என ட்விட்டர் திட்டமிட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பாதுகாப்ப குறைபாட்டை பிரபல பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான ஹேக்கர்ஒன் கண்டறிந்து ட்விட்டர் நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

அன்மையில் மிகவும் பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் இருந்து தடைசெய்யப்பட்ட பிட்காயின் தொடர்பான செய்திகள்வெளியானதால் உலகம் முழுவதும் அதிக பரபரப்பு ஏற்பட்டது என்றுதான் கூறவேண்டும். அதன்பின்னர் தான் பிரபலங்களின் டுவிட்டர் பக்கங்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது எனத் தெரியவந்தது, மேலும் நீண்ட நேர போரட்டத்திற்கு பின்னர் பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்த ஹேக்கிங் ரஷ்யா அல்லது சீனாவால் நடைபெற்றிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் எழுப்பியது, பின்பு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த விசாரணையில் பிரபலங்களை ஹேக் செய்து அதில் பிட்காயின் தொடர்பான தகவல்களை வெளியிட்டது, 3பேர் கொண்ட இளைஞர்கள் குழு என தெரியவந்தது. வெளிவந்த தகவலின் அடிப்படையில் புளோரிடாவை சேர்ந்த நிமா பாசீல்(22) இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹேப்பர்டு (19) ஆகிய இருவரும் ட்விட்டர் ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மூன்றாவது நபரான 17வயது நிரம்பிய சிறுவன் தான் இந்த ஹேக்கிங்கில் மூளையாக செயல்பட்டுள்ளான் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கிராகாம் கிளார் என்ற பெயருடைய 17வயது சிறுவன் தான் இந்த மிகப்பெரிய ஹேக்கிங்கின் முக்கிய காரணம் என தெரியவந்ததையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ட்விட்டர் ஹேக்கிங்கில் கிலார் குறைந்தது 1லட்சம் டாலர்கள் அளவில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பின்பு இவர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹேக்கிங் செய்ய காரணம் என்ன என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications