அமெரிக்கவை எதிர்த்து ரஷ்யாவிடம் எஸ்400 ஏவுகணை வாங்கும் மற்றொருநாடு.!
மேலும், அமெரிக்காகவுக்கு அத்துமீறும் சீனா மற்றும் பாகிஸ்தானை காரணம் காட்டி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதன் பிறகு அமெரிக்கா மவுனம் காத்தது. பிறகு திடீரென இந்தியா எஸ்-400 ஏவுகணை வாங்க கூடாது என்று
ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகளை இந்தியா வாங்க முன் வந்தது. மேலும், இதற்காக அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஒப்பந்தம் செய்து கொண்டது.
மேலும், அமெரிக்காகவுக்கு அத்துமீறும் சீனா மற்றும் பாகிஸ்தானை காரணம் காட்டி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதன் பிறகு அமெரிக்கா மவுனம் காத்தது. பிறகு திடீரென இந்தியா எஸ்-400 ஏவுகணை வாங்க கூடாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அப்படி வாங்கினால், அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும் என்று கூறியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவும் அடங்காமல் மற்றொரு நாடு ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணையை வாங்குதாகவும் மற்றொரு நாடு அறிவித்துள்ளது.

எஸ்-400 ஏவுகணை என்றால் என்ன?
எஸ் 400 டிரையம்ப் வகையை சேர்ந்த ஏவுகணைகள் நடமாடும் ஊர்த்தியிருந்து புறப்பட்டு வானில் பறக்கும் விமானத்தையோ தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. போர் காலங்களில் நாட்டில் உள்ள முதன்மையாக நகரங்களையும் அணு ஆயுதங் அமைப்புகளையும் எதிரிகளின் போர் விமானங்களும் ஏவுகணைகளும் தாக்காமல் காக்க முடியும்.
எஸ்-400 ஏவுகணை செயல்படும் விதம்:
ஒரு நாட்டின் வான் எல்லைக்குள் அத்துமீறி வரும் போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் இந்த ஏவுகணைகள் நுழையாமல் தடுக்கும். அப்படியே நுழைந்தாலும், 380 கிலோ மீட்டருக்கு முன்பே இது எச்சரிக்கை செய்து அத்துமீறி வரும் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை தாக்கி அழித்து விடும்.
எஸ்-300 ஏவுகணையின் மேம்படுத்திய சாதனமே எஸ்-400 ஆகும். இதை ரஷ்யாவை சேர்ந்த அல்மாஸ்-ஆன்டே நிறுவனம் 2007ம் ஆண்டு தயாரித்துள்ளது.

துருக்கி எஸ்-400 வாங்க முடிவு:
தங்கள் நாட்டில் எதிரிகளின் அச்சுறுத்தல் இருப்பதாலும், நாட்டை காக்க வேண்டியும், பாதுகாப்பு கருதியும் மற்ற நாடுகளிடம் இருக்கும் தொழில்நுட்பத்தை விட எஸ்-400 ஏவுகணைகள் அதிக வல்லமை இருப்பதாலும், துருக்கியின் கழுகு பார்வை அதன் மீது திரும்பியது.
ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை கொள்முதல் செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா எதிர்ப்பு:
ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை வாங்க கூடாது என்று துருக்கிக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு பதிலாக, அமெரிக்காவின் எதிர்ப்பால் ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்குவதை நிறுத்தப் போவதில்லை என துருக்கி தெரிவித்துள்ளது.

எஸ்-400 ஏவுகணை சிறப்பு:
அமெரிக்காவின் எதிர்ப்புக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று துருக்கி அதிபர் எல்டோகன் கூறியுள்ளார்.
அமெரிக்கா தங்களின் நட்புநாடாக இருந்தாலும் அந்நாட்டின் பேட்ரியாட் ஏவுகணைகள், ரஷ்யாவின் எஸ் 400 ரக ஏவுகணைகளை விட சிறந்தது இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் சலுகை:
தேவைப்பட்டால் அமெரிக்காவிடம் இருந்தும் ஆயுதங்களைக் கொள்முதல் செய்வோம் என்று கூறிய எர்டோகன், ஏவுகணைகள் தொடர்பாக ரஷ்யா வழங்கும் சலுகைகளை மறுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எப்-35 விமானத்துக்கு சிக்கல்:
எர்டோகனின் கருத்தால் துருக்கிக்கு வழங்க இருந்த எப் 35 ரக விமானங்களைக் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications