எஸ்-400 ஏவுகணை வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை-டிரம்ப் எச்சரிக்கை.!
ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை வாங்கினால், இந்தியா மீது கடும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா அதிபர் டெனால்டு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை வாங்கினால், இந்தியா மீது கடும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா அதிபர் டெனால்டு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே ரஷ்யாவிடம் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்தியா ஒப்பந்தம் செய்து இருந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த பிரச்னை தூக்கியுள்ளது. இந்திய அரசாங்கத்தை சற்று தூக்கி வாரிப் போட்டுள்ளது.
அமெரிக்கா ரஷ்யா மீது உள்ள வன்புணர்வை காட்டுவதாக தெரிகின்றது.

உக்ரைன் பிரச்னை:
ரஷ்யா உக்ரைன் பிரச்னை, அமெரிக்கா அரசியல் உட்பட பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி ரஷ்யா மீது அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார தடையை விதித்துள்ளது.

அணு ஆயுதங்கள் கொள்முதல்:
ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு தளவாடங்கள், அணு ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் நாடுகள், தனி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.

எஸ்-400 ஏவுகணை:
இந்தியா-ரஷ்யா இடையே நட்புற நிலவுவதால், எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா எதிரப்பு தெரிவித்து வருகின்றது.

அமெரிக்கா அதிருப்பதி:
சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கியது. இதனால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

டிரம்ப் அதிரடி:
இந்நிலையில் அமெரிக்காவின் பொருளாதார தடை சட்டத்தின் மூலம் எதிரிகளுக்கு பதிலடி என்ற நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கடந்த விழாயன்று கையெழுத்திட்டார்.

சீனா மீது பொருளாதார தடை:
இதையடுத்து ரஷ்யாவிடம் இருந்து சுகோய் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கி சீனாவின் பாதுகாப்பு தளவாடங்கள் மேம்பாட்டு நிறுவனம், அதன் இயக்குநகர் லீஷன் பூ மீது அமெரிக்கா உடனடியாக பொருளாதார தடை விதித்து. இதனால் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவுக்கு எச்சரிக்கை:
மேலும் ரஷ்யாவிடம் இருந்து ரூ.30 கோடியில் எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. அப்படி வாங்கினால் இந்தியா மீதும் கடும் பொருளாதாரத தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா நேற்று எச்சரிக்கை விடுத்தது.

ஈரான், வடகொரியா மீது நடவடிக்கை:
மேலும், ஈரான் வடகொரியா மீதும் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஆயுதங்கள் கொள்முதல் நடவடிக்கை பாதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications