சீனா தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அடியோடு ஆப்பு வைத்த டிரம்ப்.!
அமெரிக்காவின் தொழில்நுட்பம் களவாடப்படுவதற்கு எதிரான தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்யும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகின்றது. அமெரிக்காவில் சீனா நிறுவனத்தின் பொருட்களுக்கும் வரி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல சீனாவிலும் அமெரிக்காவின் பொருட்களுக்கு வரி அதிக வரி வதிப்பு வதிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளும் இடையே தற்போது வர்த்தக போர் நடக்கின்றது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார்.
அமெரிக்காவின் தொழில்நுட்பம் களவாடப்படுவதற்கு எதிரான தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்யும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

சீனா-அமெரிக்கா வர்த்தக போர்:
சீனா மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகின்றது.
இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு சீனா-அமெரிக்கா-சீனா என்று விற்கப்படும் பொருட்களுக்கு வரியை அதிகமான வித்து வருகின்றன.
சீனா-அமெரிக்காவால் மற்ற நாடுகளுக்கும் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனா பொருட்களுக்கு 25% வரிவிதிப்பு:
அமெரிக்காவில் சீனா பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை விதிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே வரியை உயர்த்தி இருந்தாலும், இந்த வரிவிதிப்பு அதிகமாகவே பார்க்கப்படுகின்றது.

ஹூவாய் போன் நிறுவனங்களுக்கு தடை:
ஹுவாய் நிறுவனம் செல்போன், அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றது. சீனா நிறுவனங்கள் அமெரிக்காவில் பல்வேறு தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன.

டிரம்ப்-அவசர நிலை பிரகடனம் :
அந்நிய மற்றும் எதிரி நாடுகள் அமெரிக்காவின் தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தை அபகரிப்பதாக தெரிவித்த டிரம்ப் இதனைத் தடுக்க தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கா தொழில்நுட்பம் பாதுகாக்க:
களவாடப்படும் தொழில்நுட்பத்தால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை பாதுகாக்க இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும் அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications