கூகுளே சொல்லிட்டாங்க- இனி ட்ரூகாலர் பயன்பாட்டில் இது செயல்பாடாது: பயனர்களே தெரிந்து கொள்ளுங்கள்!
மில்லியன் கணக்கான பயனர்களை கொண்ட பிரபலமான செயலி ட்ரூகாலர் ஆகும். சமீபத்திய ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் தேவை அறிந்து ட்ரூகாலர் செயலியில் பல அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ட்ரூகாலர் செயலி பல்வேறு தரப்பினரிடமும் பிரபலமாகவும் பிரதான பயன்பாடாகவும் இருக்கிறது. கூகுள் ட்ரூகாலர் செயலிக்கு ஒரு நிபந்தனையை அறிவித்திருக்கிறது. ட்ரூகாலர் செயலியில் இருந்து அழைப்பு பதிவு செய்யும் அம்சத்தை நீக்கும்படி அறிவித்திருக்கிறது. இது பிரபலமான செயலிக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது.

ட்ரூகாலர் தளத்தில் குரல் அழைப்பு சேமிப்பு அம்சம்
கூகுள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கொள்கையின்படி, மே 11 முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மூன்றாம் தரப்பு குரல் அழைப்பு (Call Recording) பயன்பாடுகள் எதுவும் தளத்தில் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ட்ரூகாலர் தளத்தில் குரல் அழைப்பு சேமிப்பு அம்சம் இருக்கிறது இது இனி செயல்படுத்தக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி மூன்றாம் தரப்பு குரல் அழைப்பு (Call Recording) செயலி எதுவும் இயங்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ட்ரூகாலர் தளத்தில் இனி இந்த குரல் அழைப்பு சேமிப்பு அம்சம் கிடைக்காது என தெரிவிக்கப்படுகிறது.

மூன்றாம் தரப்பு கால் ரெகார்டிங் அம்சம்
கூகுள் மூன்றாம் தரப்பு கால் ரெகார்டிங் அம்சத்தைத் தடை செய்ய முயன்று வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட கால அறிவிப்புக்கு பின் கூகிள் நிறுவனம் தற்போது ஒரு அதிரடி நடவடிக்கையை எடுக்கிறது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, கூகிள் நிறுவனம் வரும் மே 11 ஆம் தேதி முதல் மூன்றாம் தரப்பு கால் ரெகார்டிங் ஆப்ஸ்களை முற்றிலுமாக நீக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூகிள் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு 6 மார்ஷ்மெல்லோ வெர்ஷன் மூலம், டெவலப்பர்கள் தங்கள் பயன்பாடுகளில் அழைப்பு பதிவு அம்சத்தை உருவாக்க உதவும் ஏபிஐகளை நிறுவனம் முற்றிலுமாக அழித்தது. மேலும், ஆண்ட்ராய்டு 10 உடன் டெவலப்பர்கள் தங்கள் பயன்பாடுகளில் அழைப்புப் பதிவு அம்சத்தை இயக்கப் பயன்படுத்திய அனைத்து தீர்வுகளையும் நிறுவனம் அழித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, நிறுவனம் மைக்ரோஃபோன் மூலம் அழைப்பு பதிவு செயல்பாட்டையும் தடுத்துள்ளது.

கூகுள் திட்டக் கொள்கை தகவல்
இறுதி நடவடிக்கையாக, நிறுவனம் ஆண்ட்ராய்டின் அணுகல் தன்மை ஏபிஐ-களையும் அழித்து வருகிறது. அணுகல் தன்மை ஏபிஐ வடிவமைக்கப்படவில்லை மற்றும் தொலைநிலை அழைப்பு ஆடியோ பதிவுக்காகக் கோர முடியாது என்று கூகுள் தனது டெவலப்பர் திட்டக் கொள்கையில் மாற்றங்களை ஆவணப்படுத்தும் ஆதரவுப் பக்கத்தில் எழுதியுள்ளது. அதாவது, மே 11 ஆம் தேதி முதல் கூகுளின் ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆப்ஸில் ரெக்கார்டிங் செயல்பாட்டை ஆதரிப்பதை நிறுத்திவிடும்.

மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை மட்டுமே பாதிக்கும்
யூடியூப்பில் வெளியான வெபினார் தகவலின்படி, வெளியான ஒரு வெபினாரில், இந்த மாற்றம் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை மட்டுமே பாதிக்கும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தச் சூழலில் ரிமோட் என்பது ஒலிப்பதிவு நடைபெறுவதை மறுமுனையில் இருப்பவருக்குத் தெரியாமல் அழைப்பு ஒலிப்பதிவைக் குறிக்கிறது. எனவே, செயலியானது ஃபோனில் இயல்புநிலை டயலராக இருந்தால் மற்றும் முன்பே ஏற்றப்பட்டிருந்தால், உள்வரும் ஆடியோ ஸ்ட்ரீமிற்கான அணுகலைப் பெற அணுகல் திறன் தேவையில்லை.

உள்ளமைக்கப்பட்ட பயன்பாடுகள் பாதிக்கப்படாது
இது ஏற்கனவே உள்ள கொள்கைக்கு ஒரு தெளிவுபடுத்தல் என்பதால், மே 11 முதல் அனைத்து பயன்பாடுகளுக்கும் புதிய மொழி பொருந்தும், என்று டெவலப்பர்கள் அறிக்கை செய்தபடி கூகுள் வெபினாரில் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் உள்ளமைக்கப்பட்ட பயன்பாடுகள் பாதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சாம்சங், ஒன்பிளஸ், சியோமி மற்றும் ஒப்போ போன்ற நிறுவனங்கள் வழங்கும் தனிப்பயன் ஸ்கின்களின் ஒரு பகுதியாக உள்ள கட்டமைக்கப்பட்ட அழைப்பு பதிவு பயன்பாடுகள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படாது. கூகிள் திட்டமிட்டுள்ள படி மே 11 ஆம் தேதி முதல் மூன்றாம் தரப்பு கால் ரெக்கார்டிங் அம்சம் செயல்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என்று தெளிவாக நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications