ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் வாட்ஸ்ஆப்: வேறலெவல்.!
பின்பு வாட்ஸ்ஆப்-ல் சேமித்துவைத்துள்ள 7349389104-எண்ணிற்கு நீங்கள் நேரடி நிலையை விரும்பும் ரயில் எண்ணை அனுப்பவும்.
வாட்ஸ்ஆப் பொறுத்தவரை நாடு முழுவதும் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, குறிப்பாக இந்த செயலி வங்கி உட்பட பல்வேறு சிறப்பு சேவைகளுக்கு தற்சமயம் பயன்பட்டு வருகிறது. சமீபத்தில் சில புதிய வசதிகள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் பயனர்கள் ரயில் எங்கு வந்துகொண்டிக்கிறது என்ற நேரடி நிலையை சில நிமிடங்களில் தெரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த புதிய வசதி பல்வேறு ரயில் பயனிகளுக்கு கண்டிப்பாக பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்ஆப் மூலம் இதை எப்படி பயன்படுத்துவது என்ற வழிமுறையைப் பார்ப்போம்.

வழிமுறை-1:
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் 7349389104-என்ற எண்ணை சேமிக்க வேண்டும்.

வழிமுறை-2:
அடுத்து உங்கள் வாட்ஸ்ஆப்-ஐ திறக்கவும்.

வழிமுறை-3:
பின்பு வாட்ஸ்ஆப்-ல் சேமித்துவைத்துள்ள 7349389104-எண்ணிற்கு நீங்கள் நேரடி நிலையை விரும்பும் ரயில் எண்ணை அனுப்பவும்.

வழிமுறை-4:
அடுத்த சில நிமிடங்களில் ரயில் எங்குவந்துகொண்டிருக்கிறது, பின்பு அடுத்த எந்த ரயில் நிலையத்திற்கு செல்கிறது, மேலும் ரயில் எத்தனை நிமிடங்களில் சென்றடையும் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

குறுந்தவல்கள் போலியானதா :
இதற்கு முன்பு போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் வாட்ஸ்ஆப் செயலியில் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப் க்ரூப்புகளில் அதிகம் பரப்பப்படும் குறுந்தவல்கள் போலியானதா என்பது குறித்து இந்த அம்சம் யனர்களுக்கு எச்சரிக்கை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி வலைத்தள லிங்க்:
இந்த புதிய வசதி பயனர்களுக்கு வந்ததும், வாட்ஸ்ஆப்-ல் மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு வரும் வலைத்தள முகவரியை வாட்ஸ்ஆப் சோதனை செய்யும் என்று கூறப்படுகிறது. பின்பு சோதனையில் ஏதேனும் போலி வலைத்தள லின்க்-களை கண்டறிந்தால் அந்த தகவல் சிவப்பு நிறத்தில் குறியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி வலைத்தளம் & மொபைல் ஆப் மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி.?
தற்போது வாடிக்கையாளர் சேவையை பரந்த அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது இந்திய இரயில்வே துறை. மேலும் பல தொழில்நுட்பமற்றங்களைக் கொண்டுள்ளது இரயில்வே துறை. மேலும் நேரத்திற்கு தகுந்தபடி ஆன்லைனில் டிக்கெட்டை வழங்குகிறது இந்திய இரயில்வே துறை.
ஐஆர்சிடிசி அதன் வலைத்தளத்தில் சென்று டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். மற்றும் மொபைல் ஆப் பயன்படுத்தி மிக எளிமையாக பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இது பல்வேறு மக்களுக்கு எளிதாக உள்ளது. குறைந்த நேரத்தில் மிக எளிதாக டிக்கெட் பெறமுடியும்.
ஆன்லைன் பொருத்தமாட்டில் முன்பதிவு கவுண்டர்களை மிக எளிமையில் கட்டணம் செலுத்தி பெறமுடியும். மேலும் இவற்றை மாற்றியமைக்கும் வசதிகளும் ஆன்லைன்-ல் செய்யப்பட்டுள்ளது என இரயில்வே துறை அறிவித்துள்ளது.

கட்டணம்:
வாடிக்கையாளர் டிக்கெட் கட்டணம் செலுத்தும் விருப்பமாக பிஒடி-ல் முதலில் பதிவு செய்யவேண்டும். மேலும் இந்த பணம் செலுத்தும் விருப்பத்தைப் பெறுவதற்கு ஆதார் அட்டை அல்லது பான் அட்டை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

விற்பனை வரி:
தற்போது இரயில்வே டிக்கெட் பொருத்தமாட்டில் குறைந்தபட்சம் விற்ப்பனைவரி ரூ.90 ஆக உள்ளது. ரூபாய் 5000க்கு மேல் டிக்கெட் வாங்குவோர்க்கு விற்ப்பனைவரி ரூ.120 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் ஆப்:
இந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம். எந்தவித ஸ்மார்ட்போன்களையும் பயன்படுத்த முடியும்.

ஓ.டி.பி
நீங்கள் இருக்கும் நகரம் போன்ற விஷயங்கள். இதை ஃபீட் செய்தவுடன் ஜெனரேட் ஓ.டி.பி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) என்று வரும்.

மொபைல் ஆப் பயன்பாடு:
நீங்கள் இந்த ஆப்பை தரவிறக்கம் செய்ததற்கான பாஸ்வேர்ட்தான் இது. பிறகு இந்த பாஸ்வேர்டைக் கொண்டே எப்போதும் டிக்கெட்களை புக் செய்யலாம்.

ரயில் நிலையம்;
நீங்கள் பயணம் செய்ய இருக்கும் ரயில் நிலையத்தின் பெயர், எத்தனை பேர் பயணம் செய்கிறீர்கள், அரை டிக்கெட்டா, முழு டிக்கெட்டா, சாதாரண டிரெயினா, எக்ஸ்பிரஸ் டிரெயினா, ஒருவழி டிரெயினா, இருவழி டிரெயினா போன்ற விஷயங்களைக் கேட்கும்.

ஸ்லீப்பர் வகுப்பு:
இப்போது உங்கள் விருப்பபடி இரண்டாவது ஏசி, ஸ்லீப்பர் வகுப்பு, இரண்டாம் ஸ்லீப்பர் போன்றவற்றை ஆப் மூலம் தேர்ந்தேடுத்துக்கலாம். உங்கள் ரயில் மற்றும் வகுப்புக்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ஆப் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.

காத்திருக்கும் பட்டியல்:
இவற்றில் காத்திருக்கும் பட்டியல் போன்றவற்றை மிக எளிமையாக பார்த்துக்கொள்ளலாம், மேலும் முன்பதிவு ரத்து செய்யப்படும் வசதி இவற்றில் உள்ளது.

பணம் செலுத்தும் வசதி:
இன்டர்நெட் பேங்கிங் மற்றும் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். மேலும் பணம் செலுத்தியபின், உங்கள் மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் வரும்.

மொபைல்:
ஒருவர் தரவிறக்கம் செய்த மொபைலில் உள்ள சிம் கார்டை இன்னொரு மொபைலுக்கு மாற்றி டிக்கெட்டை புக் செய்ய முயற்சித்தால் அது முடியாது.என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications