Just In
- 1 hr ago
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
- 1 hr ago
உங்கள் மோதிரம் சைஸ் என்ன? போன் மூலம் சரியாக அளவெடுக்கலாமா? அது எப்படி?
- 2 hrs ago
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்: அதிக நன்மைகளை வழங்கும் நிறுவனம் எது?
- 2 hrs ago
பிப்.,7 வரைக்கும் எந்த புது போனும், டிவியும் வாங்காதீங்க: ரகரகமா வரும் OnePlus போன், டிவி!
Don't Miss
- News
தொடரும் ஆளுநர் - அரசு மோதல்! புதிய கல்விக்கொள்கையே "பெஸ்டு".. எதிர்ப்பவர்களை விமர்சித்த ஆர்என் ரவி
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Movies
ரஜினியின் ஜெயிலர் படத்தில் பாலிவுட் பிரபலம்... நெல்சனின் பிளான் இதுதானா?: ஷாக்கான ரசிகர்கள்
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Finance
தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது.. அதானி பற்றி ஹிண்டன்பர்க் ரிசர்ச்..!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
Airtel பயனரா நீங்க, அப்போ உஷார்! 12 லட்சம் வாடிக்கையாளர்கள் சத்தமில்லாமல் அப்ஸ்காண்ட்!
இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் மார்ச் மாத தொலைத் தொடர்பு சந்தா தரவின் அறிக்கை வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2020 இல் சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களைச் சேர்த்த பாரதி ஏர்டெல் நிறுவனம், மார்ச் மாதக் கணக்கின் படி சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராயின் மார்ச் மாத தரவின்படி
டிராய் வெளியிட்டுள்ள மார்ச் மாத தரவின்படி பாரதி ஏர்டெல் நிறுவனம் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் இரண்டு சேர்ந்து ஒட்டுமொத்தமாக சுமார் 75 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை தன் பிடியிலிருந்து இழந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் மட்டும் 63 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்து படு மோசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்று டிராய் தெரிவித்துள்ளது.

அம்பானி குழு படு ஹாப்பி
இந்த இரண்டு நிறுவனங்களின் நிலை இவ்வளவு மோசமாக இருக்கும் நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எந்தவித சரிவையும் காணாமல், கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 46 லட்சத்துக்கும் அதிகமான புதிய வயர்லெஸ் சந்தாதாரர்களை தன் வட்டத்திற்குள் சேர்த்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்பானி குழு படு ஹாப்பியாக உள்ளது.

வயர்லெஸ் சந்தாதாரர் சந்தைப் பங்கு
டிராய் வெளியிட்டுள்ள மார்ச் மாத தரவுகளின் அடிப்படையில், ஜியோ சுமார் 33.47 சதவீத வயர்லெஸ் சந்தாதாரர் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது என்று தெரியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் சுமார் 28.31 சதவீத சந்தைப் பங்கைக் பெற்றுள்ளது என்று டிராய் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், பிஎஸ்என்எல் நிறுவனம், மார்ச் மாதத்தில் சுமார் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய சந்தாதாரர்களை தன் வசம் சேர்த்துள்ளது.

டிராய் குறிப்பிட்டுள்ளது
இருப்பினும் இது அரசாங்கத்திற்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குக் குறைவானது தான் என்று டிராய் கூறியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் பிப்ரவரி மாத இறுதியில் சுமார் 4 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், வோடபோன் ஐடியா நிறுவனமும் மார்ச் மாதத்தில் சுமார் 63 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்துள்ளது, இது பிப்ரவரி மாதத்தை விட அதிகம் என்று டிராய் குறிப்பிட்டுள்ளது.

116 கோடியிலிருந்து சரிவு
டிராய் வெளியிட்டுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கையில், பிப்ரவரி மாத இறுதியில் சுமார் 116 கோடியிலிருந்த மொத்த வயர்லெஸ் சந்தாதாரர் எண்ணிக்கை மார்ச் மாத இறுதியில் 115 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த எதிர்பாராத சரிவை டிராய் சமீபத்திய தரவு அளிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சரிவு விகிதம்
இதன் மூலம் மாதாந்திர சரிவு விகிதம் 0.24 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தமில்லாமல் அப்ஸ்காண்ட் ஆனவர்கள் எந்த நெட்வொர்க்கை தேர்வு செய்திருப்பார்கள் என்பது மர்மாக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470