ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு டிராய் போட்ட கட்டளை.!
ஏர்டெல்லின் ராஜதந்திரம் என்னவென்றால் சுமார் சுமார் 100 மல்லியன் மக்கள் ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யாமல் ரூ.10-க்கு மட்டுமே ரீசார்ஜ் செய்து வருகின்றனர்.
அன்மையில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பர்கள் துண்டிக்கப்படும் என்று ஏர்டெல்,வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பேலன்ஸ் காலவதி குறித்த விபரங்களை
வாடிக்கையாளர்களுக்கு ஓழுங்காக தெரிவிக்குமாறு டிராய் அமைப்பு அந்நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஜியோ வந்தபின்பு ஸ்மார்ட்போன்களில் இரண்டாம் சிம் ஆக ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களில் சிம் கார்டை தான் மக்கள் அதிகமாக உபயோகம் செய்து வருகின்றனர். குறிப்பாக இன்கம்மிங்க வசதிக்காக மட்டுமே இது
போன்ற நெட்வொர்கை தேர்வு செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

35ரூபாய்
இப்போது முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம் மாதம் குறைந்தது 35ரூபாய் கூட ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் 100 மில்லியள் வாடிக்கையாளர்களை நீக்க உள்ளது என்று அறிவிப்பு வெளிவந்தது.

ஐடியா மற்றும் வோடபோன்
இதேபோன்று ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களும் தனது பங்கிற்கு 150 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது. நீக்கம் செய்யப்போவதாக இந்நிறுவனங்கள் அறிவித்துள்ள சந்தாதார்கள் அனைவரும் 2ஜி
வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்லின் ராஜதந்திரம் :
ஏர்டெல்லின் ராஜதந்திரம் என்னவென்றால் சுமார் சுமார் 100 மல்லியன் மக்கள் ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யாமல் ரூ.10-க்கு மட்டுமே ரீசார்ஜ் செய்து வருகின்றனர், இதனால் ஏர்டெல் நிறுவனத்திற்கு 1,200கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைக்கிறது. மேலும் அந்ந 100மில்லியன் மக்கள் ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்தால் கூட வருடத்திற்கு 2,100 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்.

செல்போன் நம்பர்
இந்நிலையில் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் செல்போன் நம்பர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் எச்சரித்தது, அதனால் அதிருப்பதியடைந்த வாடிக்கiயாளர்கள் தொலைதொடர்பு ஓழுங்குமுறை ஆணையத்திடம் புகார் அளித்தனர்.

டிராய்
தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில், இதற்கு தீர்வு காணும் விதமாக ஏர்டெல், வோடபோன் ஐடியாவுக்கு டிராய்
அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மூன்று நாட்களுக்குள்ளாக பேலன்ஸ் காலாவதி ஆகும் தேதி, தற்போது எந்த பிளானுக்கும்
மாறலாம் என்பது குறித்த விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு முதலில் தெரிவிக்க வேண்டும். இதனையடுத்து காலவதி
தேதிக்கு முன்பே செல்போன் இணைப்பை துண்டிக்கக் கூடாது என்றும் டிராய் தெரிவத்துள்ளது.


Click it and Unblock the Notifications