அனைவரும் பயன்படுத்தும் இந்த சேவை நிறுத்தப்படுகிறது: டிராய் அறிவிப்பு.! எந்த சேவை?
டிராய் அமைப்பு தொரடந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக டிராய் அமைப்பு பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் விரைவானமொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி(Mobile Number Portability - MNP)மொபைல் எண் பெயர்வுதிறன் (எம்.என்.பி) என்பது செல்போன் வாடிக்கையாளரை அதே தொரைபேசி எண்ணின் கீழ் மற்றொரு டெலிகாம் சேவைக்குள் அனுமதிக்கும ஒரு சேவையாகும்.

எம்.என்.பி தற்போது வரையிலாக எப்படி செயல்படுகிறது?
இந்த எம்.என்.பி தற்போது வரையிலாக எப்படி செயல்படுகிறது என்றால், இதன் செயல்முறை வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களை எடுத்துக் கொள்கிறது. இதனால் குறிப்பிட்ட ஆப்ரேட்டரிலிருந்து இன்னொரு ஆப்ரேட்டருக்கு மாற முயற்சிக்கும் சந்தாதாரர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக தான இருக்கிறது.

டிராய் அமைப்பு
இதனை கடுத்தில் கொண்டு, டிராய் அமைப்பு எம்.என்.பியை சார்ந்த விதிகளை மாற்றியுள்ளது, இந்த புதிய விதிகள் ஆனதுஎம்.என்.பியை சார்ந்த விதிகளை மாற்றியுள்ளது, இந்த புதிய விதிகள் கண்டிப்பாக சந்தாதார்கள் சந்திக்கும் தொந்தரவுகளைகுறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுறது. இருந்தபோதிலும் தொலைத் தொடர்பு துறையில் இந்த மாற்றம் கொண்டு
வரப்படுவதற்கு முன்பு, பயனர்கள் குறிப்பிட்ட காத்திருப்பு காலத்தை கடந்து செல்ல வேண்டியிருக்கும்.

எம்.என்.பி விதிகள்
அதாவது புதிய எம்.என்.பி விதிகள் மற்றும் அதை அமல்படுத்துவதற்கு முந்தைய டிரான்சிஷன் காலம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். செல்போன் எண்ணை போர்ட் செய்ய விரும்பும் சந்தாதாரர்கள் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் சந்தாதார்கள் சில நாட்கள் வரை தங்கள் சிம் கார்டை போர்ட் செய்ய முடியாது.

யுனிக் போர்டிங் கோட்
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நேற்று மாலை 6மணி முன்னதாக போர்ட்டிங் கோரிக்கையை தாக்கல் செய்த
வாடிக்கையாளர்கள் தங்களின் தனித்துவமான போர்ட்டிங் குறியீட்டை (யுனிக் போர்டிங் கோட்) பெற முடியும், இதுஆபரேட்டரிலிருந்து இன்னொரு ஆபரேட்டருக்கு போர்ட் செய்ய உதவும்.

டிசம்பர் 15-ம் தேதி வரை
ஆனால் நேற்று மாலை 6மணிக்கு பிறகு யார் போர்ட்டிங் கோரிக்கையை அளித்தாலும், சந்தாதாரர்கள் அவர்களின் எண்ணுக்கு எந்த யுபிசி-யையும் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டிரான்சிஷன் காலம் நேற்று மாலை 6மணி முதல் வரும் 2019டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கும். சொல்லவருவது என்னவென்றால் இந்த ஆறு நாட்களுக்கும், ஒரு ஆபரேட்டரிலிருந்து மற்றொரு ஆபரேட்டருக்கு அல்லது இரண்டு வட்டங்களுக்கு இடையே நிகழும் அனைத்து வகையான போர்ட்டிங்கையும் டிராய் அமைப்பு நிறுத்தியுள்ளது.

டிசம்பர் 16-ம் தேதி மீண்டும் போர்ட்டிங் செயல்முறை தொடங்கும்
மேலும் இந்த 6நாட்களில் எம்.என்.பி சேவை வழங்குநர்கள் மற்றும் பின்தளத்தில் போர்ட்டிங்கை எளிதாக்கும் பணியில் உள்ள அமைப்புகள் புதுபிக்கப்பட்டு புதிய விதிகளுக்கு இணக்கம் செய்யப்படும். பின்பு வரும் டிசம்பர் 16-ம் தேதி மீண்டும் போர்ட்டிங் செயல்முறை தொடங்கும் போது சந்தாதாரர்கள் புதிய போர்ட்டிங விதிமுறைகளை அனுபவிக்க முடியும்.

இரண்டே நாட்களில் முடியாலம்?
முன்னதாக 7நாட்கள் மேல் எடுக்கும் வெவ்வேறு தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கிடையே இன்ட்ரா சர்க்கிள் போர்ட்டிங் இப்போது தனித்துவான போர்ட்டிங் குறியீட்டின் விளைவாக வெறும் இரண்டே நாட்களில் முடியாலம் எனக் கூறப்படுகிறது.
News Source: telecomtalk.info


Click it and Unblock the Notifications