விரும்பும் சேனலைப் பார்க்கும் வசதி: டிராய்-ன் புதிய அறிவிப்பு.!
குறிப்பாக வாடிக்கையாளர்களின் மொழி, அவர்கள் வாழும் பகுதி, விருப்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு,அவர்களுக்கு தேவையான சேனல்களை கொண்ட புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
கேபிள் மற்றும் டிடிஹெச் சார்ந்த குழப்பம் மக்களுக்கு அதிகளவு உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் விரும்பும் சேனல்களை தேர்வு தேர்வு செய்வதில் கேபிள், டிடிஹெச் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருந்து வருவதால். அவர்களுக்கு தற்சமயம் கூடுதல் அவகாசத்தை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) வழங்கியுள்ளது.

இன்று டிராய் அமைப்பு கூறியது என்னவென்றால் வரும் மார்ச் 31-ம் தேதி வரை விரும்பும் சேனல்களை நுகர்வோர்கள் தேர்வு செய்து அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

டிராய்
டிராய் அமைப்பு இதுவரை கேபிள் வாடிக்கையாளர்களின் 65சதவீதம் பேர், டிடிஹெச் வாடிக்கையாளர்களில் 35சதவீதம் பேர்
விரும்பும் சேனலைப் பார்க்கும் வசதிகளைப் பெற்றுள்ளனர். ஆனால் நாட்டில் 10கோடி கேபிள் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேபிள் மற்றும் டிடிஹெச்
மேலும் டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான சேனல்களை, கேபிள் மற்றும் டிடிஹெச் சேவைகளில் தேர்வு செய்யும் புதிய முறையை நாட்டிலேயே முதல் முறையாக அமல்படுத்தி இருக்கிறோம் என்றும், பின்பு
வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமான கேபிள், டிடிஹெச் சேவைகளை வழங்க சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 31-ம் தேதி வரை
விருப்பமான சேனல்களை மக்கள் தேர்வு செய்வதில் சந்தாதாரர்களுக்கு பல்வேறு சிக்கல்கள், சிரமங்கள் இருப்பது அன்மையில் தெரியவந்தது. இதனால், வரும் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மொழி
குறிப்பாக வாடிக்கையாளர்களின் மொழி, அவர்கள் வாழும் பகுதி, விருப்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு,அவர்களுக்கு தேவையான சேனல்களை கொண்ட புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். புதிய முறைக்கு வாடிக்கையாளர்கள் மாறும் வரையிலும், எப்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் திட்டத்தையே தொடர்ந்து அளிக்க வேண்டும் என கேபிள், டிடிஹெச் நிறுவனங்களுககு உத்திரவிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








