டிராய் அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் என்னென்ன?
சுதிர் குப்தா : இந்த விதிகள் அனைத்தும் அடுத்த 6வாரத்தில் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
தொலைத் தொடர்பு துறையில் ஜியோவை அறிமுகப்படுத்தியதில் இருந்து, கட்டணமானது பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. மேலும் பல்வேறு நிறுவனங்களின் புதிய கட்டணங்கள் மற்றும் சலுகைகள் போன்றவற்றினால் தற்போது டிராய் அமைப்பிற்க்கு பல சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது.
இந்தியாவின் டெலிகாம் ரெகுலேட்டரி ஆணையம் (டிராய்) கொள்ளை விலைக்கு புதிய விதிகளை கொண்டுவருகிறது. மேலும் இந்த விதிகள் அனைத்தும் அடுத்த 6வாரத்தில் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

சுதிர் குப்தா:
டிராய் செயலாளர் சுதிர் குப்தா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியது என்னவென்றால் அனைத்துதுறை ஒழுங்குமுறை விலை நிர்ணயத்தை தெளிவுபடுத்துவதற்காக 1999 ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு வரி கட்டணத்தை டிடிஒ என்ற அமைப்பின் மூலம் கொண்டுவந்தது, தற்போது டிராய் அமைப்பு பல்வேறு கட்டணக்கொள்கை அமைத்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும் இவற்றில் பல்வேறு நன்மைகள் உள்ளது என சுதிர் குப்தா விளக்கப்படுத்தினார்.

டிராய் :
பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை கொண்டுவந்த பல்வேறு பிரச்சனைகளால் தற்போது வெளிப்படைத்தன்மையாக பல விதிமுறைகளை கொண்டுவருகிறது டிராய் அமைப்பு.

ஜியோ:
ஜியோ அறிவித்த அனைத்து இலவச ஆபர்கள் மற்றும் சலுகைகள் மூலம் தற்போது அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. மேலும் தற்போது இந்தியாவில் அதிகப்படியான வாடிக்ககையாளர்களைப்பெற்ற ஒரே நிறுவனம் ஜியோ.

புகார்:
இ.டி.ஆரின் அறிக்கையின்படி, முன்னதாக ஜியோ தனது வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய விதத்தில் ரூ 293 மற்றும் ரூ 449 என்ற விலையில் சில திட்டங்களை விற்பனை செய்வதாகவும் சுங்கவரி விதிகளை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஏர்டெல் நிறுவனம் டிராய் அமைப்பிடம் புகார் தெரிவித்தது. மேலும் இதுபோன்ற பல சிக்கல்களுக்கு டிராய் அமைப்பு புதிய விதிமுறைகளை கொண்டுவருகிறது.


Click it and Unblock the Notifications