சத்தமின்றி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களின் பிரிமியம் திட்டங்களுக்கு தடை.! டிராய் அதிரடி.!
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து புதிய புதிய திட்டங்கள் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனங்கள் சிறந்த டேட்டா நன்மையை வழங்கும் திட்டங்களை வைத்துள்ளன. மேலும் ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்து வந்தாலும், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து இலவச கால் அழைப்பு நன்மைகளைவழங்கி வருகிறது.

இந்நிலையில் ஏர்டெல்,வோடபோன் ஐடியா நிறுவனங்களின் பிரிமியம் திட்டங்களுகக்கு மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறைஆணையமான டிராய் தடை விதித்துள்ளது, இது குறித்து விரிவானத் தகவல்களைப் பார்ப்போம்.

அதாவது பிளாட்டினம் என்ற புதிய திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்தது, அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் ரெட் எக்ஸ்(REDX) என்ற பெயரில் நவம்பர் முதல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பின்பு இந்த திட்டங்களில் அதிவேக டேட்டா சேவை அளிக்கப்படும், சில சேவைகளில் முன்னுரிமை கிடைக்கும் எனறும் அறிவித்தன

தற்சமயம் டிராய் அமைப்பு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, பிரிமியம் திட்டங்களால் அதில் சேராத மற்ற சந்தாதாரர்களுக்கான சேவை தரம் பாதிக்கப்படும். எனவே இத்திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே பிரிமியம் திட்டத்தில் சேர்ந்தோரின் நலன்களை பாதுகாக்க வேண்டும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரிமியம் திட்டத்தில் சேர்ந்தோரின் நலன்களை பாதுகாக்கும்படியும் டிராய் கூறியுள்ளது, டிராயின் உத்தரவுக்கு வோடபோன்ஐடியா ஆச்சரியத்தை தெரியபடுத்திய நிலையில, ஏர்டெல் நிறுவனம் அதுபற்றி கருத்து எதுவும் வெளியிடவில்லை.

அன்மையில்பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பட்டியல் ரூ .99, ரூ .129 மற்றும் ரூ .199 திட்டங்களை தற்பொழுது கூடுதல் வட்டங்களில் அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த மூன்று திட்டங்களும் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே கிடைத்து. ஆனால், தற்பொழுது ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தைப் பல பகுதிகளில் கிடைக்கும் படி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications