Home
News

கற்றல் களங்கள்: இப்போ இது கட்டாயம்- டாப்-10 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்- மாணவர்களே!

கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நடைமுறைகளையும் மாற்றி அமைத்தது. குறிப்பாக கல்வித்துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அதேபோல் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலைபார்க்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலை நீடித்தது. இதன்காரணமாக மாணவர்களின் நலன்கருதி ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவின் எதிர்காலம்

இந்தியாவின் எதிர்காலம்

இந்தியாவின் எதிர்காலம் என்ற பொறுப்பில் கல்வித்துறைக்கு அதிக பங்கு உண்டு. செயற்கை நுண்ணறிவை கல்வியில் ஒருங்கிணைப்பதில் தொடக்க கல்விக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் கல்வி கற்றலை மேம்படுத்துவதில் பெரும்பங்குண்டு. மைல்கற்களை அடையும் முயற்சியாக சரியான வசதிகள் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கும் உதவ எடெக் ஸ்டார்ட்-அப்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. இந்தியாவில் கல்வி தொடக்கங்களில் டாப்-10 செயற்கை நுண்ணறிவை பார்ப்போம்.

யூபியஸ் (Eupheus)

யூபியஸ் (Eupheus)

யூபியஸ், 21 ஆம் நூற்றாண்டின் கற்றல் தீர்வுகளை உலக சந்தையில் இருந்து இந்திய சந்தையில் உள்ள இளைஞர்களுக்கு கொண்டுவருவதில் கவனம் செலுத்துகிறது. இதன் அணுகுமுறையில் செயற்கை நுண்ணறிவை செயல்படுத்துவதன் மூலமாக எதிர்கால வாழ்க்கை முறைக்கு தயாராவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் கருவிகளில் மாணவர்களுக்கு மதிப்புமிக்க அனுப்பவத்தை வழங்குவதோடு ப்ரீ-கேஜி முதல் 12 ஆம் வகை வரையிலானா பாடத்திட்டத்தை ஒருங்கிணைக்கின்றன. 2020 ஆம் ஆண்டில் யூபிஎஸ் சீரிஸ் ஏ நிதியின் மூலம் 4.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டப்பட்டது. இது பாடத்திட்ட மின் புத்தகங்கள், பொருட்கள், மதிப்பீடுகள், திட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளால் செய்யப்பட்ட கருவிகளை வழங்குகிறது. இவை மாநில மற்றும் மாத்திய கல்வி வாரியங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

செயல்முறை (Practically)

செயல்முறை (Practically)

பிராக்டிக்கல், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கல்வித் தொடக்கங்களில் பிரபலமான செயற்கை நுண்ணறிவில் இது ஒன்றாகும். இது கற்றல் அனுபவத்தை நடைமுறையில் கொண்டு வருகிறது. மேலும் கருத்துகளை நன்கு புரிந்து கொள்வதோடு வகுப்பறைகளில் ஏ-கிரேடு மதிப்பெண் பெற சுய கற்றல் பயன்பாடு இதில் இருக்கிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தை ஈடெக் ஸ்டார்ட்-அப் வழங்குகிறது. தொடக்கத்தில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், 18000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயவிவரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தொடக்கத்தை இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் அணுகுகின்றன. இது மாணவர்கள் தொடர்ந்து கற்றல் பெறுவதற்கு எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஆக்மென்ட் ரியாலிட்டி மற்றும் மெய்நிகர் ரியாலிட்டி கல்வி கற்றல் அனுபவத்தை வழங்குகிறது.

மைண்ட்லர் (Mindler)

மைண்ட்லர் (Mindler)

மைண்ட்லர், தொழில்முறை முடிவுகளில் அக்கறை கொண்ட மாணவர்களுக்கு ஆலோசனை அமர்வுகளை வழங்குவதில் இந்த பயன்பாடு கவனம் செலுத்துகிறது. வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு தொழில் ஆரம்பம் மிக அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. எடெக் ஸ்டார்ட்-அப் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலை மனித தலையீடுகளானது மாணவர்களின் வாழ்க்கையை கிக்ஸ்டார்ட் செய்ய பயன்படுத்துகிறது. இது 8 ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையிலான மாணவர்களுக்கு பெரிதளவு உதவுகிறது.

நன்றாக எண்ணுவது (Counting Well)

நன்றாக எண்ணுவது (Counting Well)

பெங்களூருவை தளமாகக் கொண்ட ஒரு பிரபலமான எடெக் ஸ்டார்ட்-அப் பயன்பாடாகும். இது ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தினசரி 20 நிமிடங்களில் வீட்டில் இருந்து மாஸ்டர் கணிதத்தை கற்க உதவுகிறது. 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பல வேடிக்கையான கற்றல் கணித வகுப்புகளை வழங்குகிறது. மேலும் தனிப்பயனாக்கப்பட்ட ஏஐ- அடிப்படையிலான கணித பயிற்சி திட்டங்களை பெறலாம்.

ஜங்ரூ கற்றல் (Jungroo Learning)

ஜங்ரூ கற்றல் (Jungroo Learning)

கூடுதல் கற்றல் தேவையை பூர்த்தி செய்யும் தன்மை ஜங்ரூ கற்றல் பயன்பாட்டுக்கு உள்ளது.

ரியல் கற்றல் (Real Learning)

ரியல் கற்றல் (Real Learning)

ரியல் கற்றல், இந்தியா முழுவதும் உள்ள ஆசிரயர்களுக்கான செயற்கை நுண்ணறிவை செயல்படுத்துவன் மூலம் மன அழுத்த மதிப்பீட்டு சுழற்சிகளை தகர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் கையால் எழுதப்பட்ட விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் சரிபார்க்க உதவுகிறது.

எம்பிபே (Embibe)

எம்பிபே (Embibe)

இலவச கற்றல் உள்ளடக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளை மையமாகக் கொண்ட கல்வி தொடக்கத்தின் மற்றொரு செயற்கை நுண்ணறிவு நுட்பமாகும். இது JEE Main, NEET, AIIMS, JEE Advanced, Bank, Railway, BITSAT போன்ற தேசிய அளவிலான தேர்வுகள் கற்றலை வழங்குகிறது.

ஸ்டெம்ரோபோ டெக்னாலஜி (stemROBO Technologies)

ஸ்டெம்ரோபோ டெக்னாலஜி (stemROBO Technologies)

ஸ்டெம்ரோபோ டெக்னாலஜிஸ் கல்வியில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவன் மூலம் நாடுமுழுவதும் உள்ள கல்வியாளர்களுக்கு ஒருங்கிணைந்த எண்ட் டூ எண்ட் சலுகைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

அவிஷ்கார் (Avishkaar)

அவிஷ்கார் (Avishkaar)

அவிஷ்கார் ரோபாட்டிக்ஸ் தளமானது அடுத்த தலைமுறை அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு இளம் கண்டுபிடிப்பாளர்களை வழிநடத்துகிறது. குறியீட்டு முறை, ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, ஐஓடி மற்றும் பல நவீன திறன்கள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க இது உதவுகிறது.

ரோபோகார்ட்

ரோபோகார்ட்

ரோபோடிக்ஸ், ஆக்மென்ட் ரியாலிட்டி, செயற்கை நுண்ணறிவு மற்றும் பலவற்றைப் பற்றி மாணவர்களுக்குக் கற்பிக்க அனுமதிக்கிறது. பல கல்வி நிறுவனங்கள் இதில் பயிற்சி எடுக்க தொடங்குகின்றனர். இந்த திட்டத்தை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Top-10 Artificial Intelligence For Start-ups Education in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X