உச்சநீதிமன்றம் : டிக்டாக் செயலிக்கான தடை நீங்கியது- இனி ஆட்டம் பாட்டம்.!
டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 75 மொழிகளில், பல ன் நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்திவருகின்றனர்.
இன்று டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்திவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான வழக்கில் உயர்நீதமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ஏற்று, சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு மத்திய
அரசு தடை வதித்தது.

பின்பு கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் செயலி நீக்கப்பட்டது. ஆனால் டிக்டாக் செயலியை அறிமுகப்படுத்திய சீன நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

டிக்டாக்
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி இன்று உத்திரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து, நாளை மறுநாள் முடிவெடுக்க வேண்டும் என்றும்
ஆணையிட்டுள்ளது.

சென்னை
அன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம், டிக் டாக் செயலி தொடர்பான எந்த முடிவையும் எடுக்காவிட்டால், அச்செயலிக்கான தடை தானாகவே விலகியதாக கருதலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டப்மேஷ்
இந்த டிக் டாக் செயலி அனைவராலும் பகிரப்படுகிறது, குறிப்பாக சினிமா பாட்டுக்கு ஆடிப்பாடுவது, டப்மேஷ் செய்வது, சினிமா வசனங்களைப் பேசுவது, சாகசத்தில் ஈடுபடுவது என பல்வேறு செயல்களை இந்த செயலி மூலம் பதிவு செய்கின்றனர்.

75 மொழிகளில்..
டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 75 மொழிகளில், பல ன் நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்திவருகின்றனர்.

வீடியோ மார்பிங்
மேலும் சிலர் டிக் டாக் போன்ற 'மியூசிக்கலி' போன்ற பல்வேறு செயலிகளை டவுன்லோடு செய்து அதையே முழுநேரமும் பார்த்து பொழுதைக் கழிக்கின்றனர். இந்த செயலி மூலம் வீடியோ மார்பிங் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications