Home
News

விபரீதத்தில் முடிந்த டிக் டாக் சேலஞ்சு! 12 வயது சிறுவனுக்கு நடந்த பரிதாபம்!

டிக் டாக் செயலியில் அதிகப்படியான சேலஞ்சுகள் பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிகி சேலஞ்சு, கரப்பான்பூச்சி சேலஞ்சு என்ற பல வினோதமான மற்றும் ஆபத்தான சேலஞ்சுகளை டிக் டாக் பயனர்கள் சவாலாகச் செய்து வந்தனர், தற்பொழுது அதே போன்ற ஒரு சவாலிற்கு 12 வயது சிறுவன் பரிதாபமாகி பலி ஆக்கியுள்ள சம்பவம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம்

50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம்

டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டிக் டாக் ஆப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்கள் முதல் டிக் டொக் செயலி

பள்ளி மாணவர்கள் முதல் டிக் டொக் செயலி

பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்லுவதற்கு வழிவகுக்கிறது என்றும், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது.

டிக் டாக் தடை

டிக் டாக் தடை

இந்தோனேசியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் முன்பே இந்த டிக் டாக் செயலிகள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக் டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்யத் தடைவிதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு மீண்டும் அந்த தடை நீக்கப்பட்டு டிக் டாக் செயலி இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டது.

12 வயது சிறுவன் செய்த சேலஞ்சு

12 வயது சிறுவன் செய்த சேலஞ்சு

தற்பொழுது ராஜஸ்தானைச் சேர்ந்த 12 வயது சிறுவன், கைகளில் வளையல் மாட்டிக்கொண்டு தாலியும் கட்டிக்கொண்டு கழுத்தில் ஒரு பெரிய இரும்பு சங்கிலியைக் கட்டிக்கொண்டு டிக் டாக் சேலஞ்சை இரவு முழுதும் செய்திருக்கிறார் என்று அச்சிறுவனின் தந்தை தெரிவித்திருக்கிறார்.

பிணமாகத் தூக்கில் தொங்கிய சிறுவன்

பிணமாகத் தூக்கில் தொங்கிய சிறுவன்

டிக் டாக் சேலஞ்சு செய்த சிறுவன், பாத்ரூமில் சங்கிலியால் தூக்கில் தொங்கி இறந்திருக்கிறான். இந்த சம்பவம் இரவில் நடந்ததனால் வீட்டிலிருந்த யாருக்கும் சரியாக என்ன நடந்தது என்று தெரியவில்லை. காலை விடிந்த உடன் பெற்றோர்கள் சிறுவனைத் தேட துவங்கிய பொழுது பாத்ரூமில் பிணமாகத் தூக்கில் தொங்கியவனைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளனர்.

டிக் டாக்கினால் விபரீதம்

டிக் டாக்கினால் விபரீதம்

டிக் டாக் செயலி இல்லாமல் இருந்திருந்தால் என் மகன் இன்று உயிருடன் இருந்திருப்பான் என்று அந்த சிறுவனின் தந்தை கதறியது அனைவரையும் உலுக்கியது. இதேபோல் சென்ற வரம் நாடு துப்பாக்கி வைத்து டிக் டாக் வீடியோ செய்த இளைஞனும் காய் தவறுதலாகத் தன்னை தானே டிக் டாக் வீடியோ செய்யும்பொழுது சுட்டுக்கொண்டு உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுவனின் மரணம் குறித்து டிக் டாக் பதில்

சிறுவனின் மரணம் குறித்து டிக் டாக் பதில்

சிறுவனின் மரணம் குறித்து டிக் டாக் நிறுவனம் கூறியதாவது "பயனர்களுக்கான பயன்பாட்டுச் சூழலை நாங்கள் பாதுகாப்பாகவும் நேர்மறையாகவும் பராமரிக்கிறோம், அதே நேரத்தில் அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த மட்டுமே ஊக்குவிக்கிறோம். இந்த சம்பவத்தில் நடந்தது போன்ற டிக் டாக் சேலஞ்சு எதுவும் எங்கள் செயலியில் உருவாக்கப்படவில்லை, முக்கியமாக இது போன்ற ஹேஷ் டேக் கூட உருவாக்கப்படவில்லை என்று டிக் டாக் உறுதிப்படுத்தியுள்ளது.

பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே டிக் டாக் இயங்குகிறது

பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே டிக் டாக் இயங்குகிறது

பயனர்களைப் பாதிப்படையச் செய்யும் எந்த ஒரு செயலையும் டிக் டாக் ஒப்புதல் அளித்து, ஊக்குவிக்காது. பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான வழிகளைப் பின்பற்றி வருகிறது என்றும் டிக் டாக் நிறுவனம் தற்பொழுது தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
TikTok Challenge Gone Wrong Rajasthan 12 Year Old Boy Hangs Himself : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X