Home
News

அங்க தான் அப்படினா.,இங்கயும் இப்படியா?-6 மாதத்திற்கு பிறகு பூமிக்கு வரும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்

அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து வரும் இந்த நேரத்தில் விண்வெளியில் இருந்து பூமிக்கு மூன்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வர உள்ளனர்.

விண்வெளி பயணத்தை முடித்து கொண்டு பூமிக்கு திரும்ப உள்ள ஆராய்ச்சியாளர்கள்

விண்வெளி பயணத்தை முடித்து கொண்டு பூமிக்கு திரும்ப உள்ள ஆராய்ச்சியாளர்கள்

விண்வெளி ஆராய்ச்சியாளர்களான நாசா வை சேர்ந்த ஜெசிக்கா மெயர், ஆன்டுரூ மார்கன் மற்றும் ரஷ்யன் ஸ்பேஸ் ஏஜென்சியை சேர்ந்த ஓலெக் ஸ்கிரிபோஸ்கா ஆகிய மூவரும் தங்களின் விண்வெளி பயணத்தை முடித்து கொண்டு பூமிக்கு திரும்ப உள்ளனர்.

உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கை

உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கை

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதில் முக்கிய நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன.

இன்டர்நேஷனல் ஸ்பேஸ் சென்டருக்கு தனது குழுவுடன் சென்றிருந்தார்

இன்டர்நேஷனல் ஸ்பேஸ் சென்டருக்கு தனது குழுவுடன் சென்றிருந்தார்

கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜெசிக்கா மெயர் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் சென்டருக்கு தனது குழுவுடன் சென்றிருந்தார். அவர் பூமியில் இருந்து கிளம்பி சுமார் ஆறு மாதங்கள் முடிவடைய உள்ளது. அவர் விண்வெளி ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு சென்று சுமார் ஆறு மாதங்கள் முடிந்ததால் அவருக்கு பூமியில் சமூக இடைவெளியை பின்பற்றுவது எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூமியில் சமூக இடைவெளி

பூமியில் சமூக இடைவெளி

இருப்பினும் விண்வெளி ஆய்வு மையத்தில் தனிமையையே கடைப்பிடித்து பூமிக்கு திரும்பும் நாளுக்கு அவர் காத்திருந்த நேரத்தில் தற்போது பூமியில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு இது வருத்தமளிக்கும் செய்தி என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சமூகத்திடம் இருந்து எப்படி விலகி வாழ்வது

சமூகத்திடம் இருந்து எப்படி விலகி வாழ்வது

இதனால் ஏற்கனவே அவருக்கு சமூகத்திடம் இருந்து எப்படி விலகி வாழ்வது என்பது குறித்த அனுபவம் இருக்கும். ஆனால் அவரை பொருத்த வரை பூமியில் இந்த கட்டுப்பாட்டை பின்பற்றுவது என்பது சவாலாக இருக்கும் என சொல்கிறார்.

ஜெசிக்கா மெயர் கூறுவது குறித்து பார்க்கலாம்

ஜெசிக்கா மெயர் கூறுவது குறித்து பார்க்கலாம்

இது குறித்து ஜெசிக்கா மெயர் கூறுவது குறித்து பார்க்கலாம். பூமியில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நான் பின்பற்றும் போது விண்வெளியில் இருந்ததை விட பூமியில் தனியாக உணருவேன் என கூறியுள்ளார். அதேபோல் விண்வெளியில் இருக்கும் போது எங்களுக்கு பல சவாலான வேலைகள் இருந்ததால் அங்கு தனியாக இருந்த உணர்வு தோன்றவே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பூமியில் தற்போது நிலவி வரும் சூழல்

பூமியில் தற்போது நிலவி வரும் சூழல்

பூமியில் தற்போது நிலவி வரும் சூழல் எங்களுக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இப்போதும் கூட இங்கிருந்து பார்க்கும் போது பூமி மிகவும் அழகாக தெரிகிறது என கூறினார். மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், ஏழு மாதங்கள் விண்வெளியில் இருந்து வீடு திரும்பி வரும் வரும்போது, இது போன்ற கட்டுப்பாடுகளை நினைத்து கவலையாக உள்ளது எனவும் இருப்பினும் இவை எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தான் எனவும் ஆறுதல் வார்த்தை கூறினார்.

பூமியிலும் சமூககட்டுப்பாடு என்பது சவாலாக இருக்கும்

பூமியிலும் சமூககட்டுப்பாடு என்பது சவாலாக இருக்கும்

அதேபோல் குறிப்பாக இவர்கள் பூமியில் இருந்து புறப்பட்டு ஆறு மாதங்களுக்கு ஆகிவிட்ட நிலையில் இவர்கள் சமூகத்திடம் இருந்த விலகி இருந்திருக்கிறார்கள். இவர்கள் பூமியில் வரும்போது பல எதிர்பார்ப்போடு வருவார்கள் தற்போது பூமியிலும் சமூககட்டுப்பாடு என்பது சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Three astronauts are coming back to earth after six months later
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X