அணு ஆயுத சோதனையில்லாமல் டிரம்பை அதிரவிட்ட வடகொரியா.!
மேலும், ஆனால் அமெரிக்கா கூறிய படி பொருளாதார தடையை நீக்கவில்லை. இதனால் வடகொரியாவில், அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று திரண்டு புதிய சாகப்தத்தை துவங்கினர். தற்போது அணு ஆயுத சோதனை நடத்தாமல் அமெரிக்காவை வட
வடகொரியா யாருக்கும் அஞ்சாமல் தனது நிலைபாடு ஆன அணு ஆயுத சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி வந்தது. இது அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின.
இதையடுத்து, வடகொரியா மீது பொருளாதர தடையை அமெரிக்கா வித்தது. இந்த உத்தரவை பல்வேறு நாடுகளும் செயல்படுத்தின. வடகொரியா-தென்கொரியாவுக்கு நட்புறவு ஏற்பட்டது. மேலும், அமெரிக்காவும்-வடகொரியாவும் பேச்சு வார்த்தை நடத்தின. பிறகு, அணு ஆயுத சோதனைகளை நிறுத்திக் கொள்வதாக வடகொரியா அறிவித்தது.

மேலும், ஆனால் அமெரிக்கா கூறிய படி பொருளாதார தடையை நீக்கவில்லை. இதனால் வடகொரியாவில், அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று திரண்டு புதிய சாகப்தத்தை துவங்கினர்.
தற்போது அணு ஆயுத சோதனை நடத்தாமல் அமெரிக்காவை வடகொரியா அதிரவிட்டுள்ளது.

வடகொரியா அணு ஆயுத சோதனை:
வடகொரியான தனது அணு ஆயுத சோதனையை நடத்தி காட்டியது. பல்வேறு முறை தனது அணு ஆயுத சோதனையை நடத்தியது. இதனால் அருகே இருக்கும் நாடான ஜப்பான், தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கதிலங்கின.

அணு ஆயுத சோதனை கிடங்கு:
அணு ஆயுத சோதனை நடத்த பல்வேறு கிடங்குகளை வடகொரியா உருவாக்கி வைத்திருந்து. மேலும், அணு ஆயுதங்களையும் குவித்தும் பல்வேறு நாடுகளுக்கும் சப்-ளை செய்து வந்தது.

பொருளாதர தடை விதிக்கப்பட்டது:
வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பொருளாதார தடையை விதித்தன. இதனால் வடகொரியாவின் பொருளாதரத்தில் மந்த நிலை ஏற்பட்டது.
பொது மக்களுக்கும் இயல்வு வாழ்கை பாதிக்கப்பட்டது. இதை தவிடு பொடியாக்க பல்வேறு யுக்திகளை வடகொரியா கையாண்டது.

22 ஏவுகணை சோதனை:
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

வட கொரியா-தென் கொரியா உறவு:
எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது. இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது.

அணு ஆயுத ஒப்பந்தம்:
இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது. இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது. ஆனால், இதனை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

வடகொரியா மீது தடை விலக்கவில்லை:
ஒப்பந்தத்தின் படியும், கேட்டுக் கொண்டதின் படியும் வடகொரியா மீது உள்ள பொருளாதார தடை உத்தரவை அமெரிக்கா இன்று வரை திரும்ப பெறவில்லை. இதனால் ஏன் நாம் அமெரிக்காவின் உத்தரவுக்க செவி சாய்க்க வேண்டும் என்று நிலைப்பாட்டை வடகொரியா எடுத்துள்ளது.

பியாங்ஜின் ஒப்பந்தம்:
பியாங்ஜின் எனவே அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவிட்டால் தங்கள் நாட்டின் பியாங்ஜின் (pyongjin) கொள்கைப்படி அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பப் போவதாக வடகொரிய தற்சமயம் எச்சரித்துள்ளது.

ஐநா கண்டனம்:
இந்நிலையில், வடகொரியா நாட்டின் வளங்களை அணு ஆயுதத் தயாரிப்புக்கு திருப்பியதன் மூலம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியிருப்பதாக ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐநா குற்றச்சாட்டு :
ஐ.நா சைபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் வடகொரியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் தீவிர மற்றும் நாட்பட்ட ஊட்டச் சத்துக் குறைபாடுகளுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நாட்டின் வளங்கள் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மூன்று அதிகாரிகள் மீது நடவடிக்கை:
மனித உரிமைகள் மீறல் தொடர்பாக வடகொரியாவின் மூன்று முக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. இதில், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் வலக்கரம் என்று கருதப்படும் அதிகாரி ஒருவரும் உள்ளார்.

கிண்டல்கள்:
அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பை வடகொரியா அதிபர் ஜிங் ஜோம் உன் கிண்டல் அடித்தார். இதற்கு பதிலடியாகவும் அதிபர் டிரம்ப் ஜிங்
ஜோனை கிண்டல் அடித்தார். பிறகு, அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக வடகொரியாவும் அறிவித்தது.

பொருளாதார தடை நீக்கவில்லை:
அமெரிக்காவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து அணுஆயுத தயாரிப்பை நிறுத்த வடகொரியா முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் பொருளாதார தடைகளை விலக்க அமெரிக்க முன்வரவில்லை.

வடகொரியாவில் பேரணி:
வடகொரியாவில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். அந்நாட்டின் போனங்யெங் நகரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள் கைகளில் தேசிய கொடியை ஏந்தி வந்தனர்.

வலியுறுத்தல்:
பொருளாதார தடைகளை விலக்க அமெரிக்க முன்வரவில்லை என்றும், இதனை நீக்க வேண்டும் என்றும், வட கொரிய அதிபர் வலியுறுத்தினார். அவரது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பேரணி நடந்தது.
இது அணு ஆயுத சோதனையில்லாமல் அமெரிக்காவை அதிரவிட்டுள்ளது வடகொரியா.


Click it and Unblock the Notifications