சொந்தமாக ஹெலிகாப்டர் உருவாக்கிய படிப்பறிவில்லாத மெக்கானீக்..!
ஒரு மிகச்சிறந்த கண்டுப்பிடித்தலை நிகழ்த்த ஆடம்பரமான பெரிய பல்கலைகழகத்தில் இருந்து மாஸ்டர் டிகிரி ஒன்று வேண்டும் என்ற சட்டம் ஒன்றுமில்லை. அதீத ஆர்வமும், உந்து சக்தியும் இருந்தால் மட்டுமே போதும், யாரும் எதையும் உருவக்கிட இயலும்..!
அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான் - மெக்கானீக் சாகர் பிரசாத் ஷர்மா..!

ஆட்டோமொபைல் மெக்கானீக் :
அசாம் மாநிலத்தை சேர்ந்த 25 வயது நிரம்பிய ஆட்டோமொபைல் மெக்கானீக் தான் சாகர் பிரசாத் ஷர்மா.

சொந்த ஹெலிகாப்டர் :
பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட சாகர் பிரசாத் ஷர்மா, முழுக்க முழுக்க சொந்தமாக ஒரு ஹெலிகாப்டரை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

எஸ்யூவி என்ஜீன்கள் :
இந்த ஹெலிகாப்டரை உருவாக்க உலோக தகடுகள், கார் சீட்கள் மற்றும் இரண்டு எஸ்யூவி என்ஜீன்கள் போன்றவைகளை ஷர்மா பயன்படுத்தியுள்ளார்.

உயரம் :
2 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய இந்த ஹெலிகாப்டர் ஆனது சுமார் 30 முதல் 50 அடி உயரம் வரை பறக்கும் என்கிறார் இதனை உருவாக்கிய ஷர்மா.

3 ஆண்டுகள் :
சொந்தமாக ஹெலிகாப்டர் உருவாக்கும் தனது இந்த கனவு நினைவாக 3 ஆண்டுகள் மற்றும் 15 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது என்றும் ஷர்மா தெரிவித்துளார்.

பவன் புத்ரா :
ஷர்மா தனது சொந்த ஹெலிகாப்டருக்கு 'பவன் புத்ரா' (Pavan Puthra) என்று பெயர் சூட்டியது மட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அங்கீகாரம் பெற காத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரிசோதனை :
ஒப்புதல் கிடைத்த பின்பு ஷர்மா தனது ஹெலிகாப்டரை பரிசோதனைக்கு உட்படுத்த இருக்கிறார் மேலும், இந்த ஹெலிகாப்டரை உள்ளூர் மக்களுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி :
தற்போது மிகவும் மோசமான போக்குவரத்து வசதிகளை கொண்டிருக்கும் ஷர்மாவின் கிராமம் இந்த ஹெலிகாப்டர் மூலம் வளர்ச்சி அடையும் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications