Home
News

பேடிஎம் வாடிக்கையாளர்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது புதிய கருவி.!

இந்தியாவில் பேடிஎம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது, குறிப்பாக இணையவழி பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படும் ஆப்களில் அதிகமாகப் பயன்படுத்துவது இந்த பேடிஎம் ஆப் தான். மேலும் இந்த பேடிஎம் நிறுவனம் புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது.

குறுந்தகவல் செல்ல சில நிமிடங்கள் ஆகும்

குறுந்தகவல் செல்ல சில நிமிடங்கள் ஆகும்

இந்நிறுவனம் பணிப் பரிமாற்றங்களை மேன்மேலும் எளிமையாக்க சில புதிய வசதிகளை செய்துகொண்டே இருக்கிறது, இப்போது நடைமுறையில் ஆப் மூலமாக ஸ்கேன் செய்து பணம் அனுப்பும்போது அது சென்றடைய குறுந்தகவல் செல்ல சில நிமிடங்கள் ஆகும், அதுவரை வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளருக்கும் இடையே கண்டிப்பாக
ஒரு ஆசௌகர்யத்தை ஏற்படுத்துகிறது என்று தான் கூறவேண்டும்.

 ஒலிப்பெட்டி

ஒலிப்பெட்டி

இந்நிலையில் பேடிஎம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை புரிந்தகொண்டு புதிதாக ஒரு கருவியைக் கொண்டுவரப்போகிறது,அது ஒரு ஒலிப்பெட்டி (சவுண்ட்பாக்ஸ்) ஆகும்,ஒரு சிம் கார்டு போட்டுவைத்துக்கொண்டால் போதும். அதிலேயே ஸ்கேன் செய்து பணப் பரிமாற்றத்தை செய்யலாம்.

 பணம் வந்துவிட்டது என்பதை அந்த ஒலிப்பெட்டி அறிவிக்கும்

பணம் வந்துவிட்டது என்பதை அந்த ஒலிப்பெட்டி அறிவிக்கும்

பின்பு பணப் பரிமாற்றம் முடிந்தவுடன், பணம் வந்துவிட்டது என்பதை அந்த ஒலிப்பெட்டி அறிவிக்கும்.அவ்வளவுதான் இதில்
குறுந்தகவலுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை, குறிப்பாக இந்த கருவி 4ஜி சேவையுடன் இருப்பதால் வேகமாக
இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும்

மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும்

மேலும் உங்கள் அக்கவுன்டுக்கு பணம் வந்துவிட்டது என்பதை பார்த்து தெரிந்துகொள்வதைவிட ஒரு குரல் அறிவிப்பதன்
மூலம் எளிமையாக தெரிந்துகொள்ளலாம். கண்டிப்பாக இந்த கருவி பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

 பணம் மட்டுமே அனுப்ப முடியும்

பணம் மட்டுமே அனுப்ப முடியும்

தற்சமயம் இந்த கருவியில் பணம் மட்டுமே அனுப்ப முடியும், இதில் கேமரா கிடையாது, எதிர்காலத்தில் பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என்றும தெரிவிக்கப்பட்டுள்ளது,தற்சமயம் இந்த வகையான பரிமாற்றத்தைச் செய்ய முயல்வது பேடிஎம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தா கட்டி இந்த கருவியை வாங்கி வைத்தால் போதும்

சந்தா கட்டி இந்த கருவியை வாங்கி வைத்தால் போதும்

இதை பயன்படுத்தும் விற்பனையாளருக்கு பேடிம் பயன்படுத்த கண்டிப்பாக ஸ்மார்ட்போன் தேவைப்படாது, அவர்கள் சந்தா
கட்டி இந்த கருவியை வாங்கி வைத்தால் போதும். அதிலும் சில்லறை வியாபராம் செய்பவர்களுக்கு இந்த கருவி கண்டிப்பாக மிகவும் உதிவியாய் இருக்கும். பின்பு விரைவில் இந்த கருவி அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
this-paytm-device-will-announce-transactions : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X