இந்தியாவின் செயற்கைக்கோள்களை ஏவ உதவும் கிளியோஸ் ஸ்பேஸ் நிறுவனம்!
கிளியோஸ் ஸ்பேஸ், விண்வெளியில் இயங்கும் ரேடியோ அதிர்வெண் மறுமதிப்பீட்டு டேட்டாக்களை தரும் சேவை நிறுவனம், இந்தியாவின் நான்கு கிளியோஸின் ஸ்கெளட்டிங் மிஷன் செயற்கைக்கோள்களை அதன் ராக்கெட் போலார் சேட்டிலைட் சி 49 மூலம் ஏவ சம்மதம் தெரிவித்துள்ளது.

கிளியோஸ் ஸ்பேஸ்
இதுகுறித்து கிளியோஸ் ஸ்பேஸ் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், 'தனது கே.எஸ்.எம் செயற்கைக்கோள்களை பிப்ரவரி 10 ஆம் தேதி சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய ராக்கெட் தளத்தில் இருந்து அனுப்பவுள்ளது.

கே.எஸ்.எம் செயற்கைக்கோள்கள்
முதலில் கே.எஸ்.எம் செயற்கைக்கோள்கள் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மற்ற நிறுவனங்களின் செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய ஒருசில பணி காரணமாக இந்த செயற்கை கோள்களை அனுப்ப தாமதம் ஆனதாக தெரிவித்துள்ளது.

ஏவுகணை ஏவுதலுக்கான அனைத்து இறுதிகட்ட பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும், கிளியோஸின் நான்கு செயற்கைக்கோள்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் 37 டிகிரி சாய்வில் செலுத்தப்படும் என்றும், இந்த ஏவுகணை ஏவப்படுவதை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி, தென் சீனக் கடல், ஆஸ்திரேலிய கடற்கரை, தெற்கு அமெரிக்க கடற்கரை மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்க கடற்கரை ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிளியோஸ் ஸ்பேஸ் தெரிவித்துள்ளது

வணிகரீதியிலான செயற்கைக்கோள்
சமீபத்திய ஆண்டுகளில் வணிகரீதியிலான செயற்கைக்கோள்களை அனைத்து விண்வெளி நிறுவனங்களும் அனுப்புவது அதிகரித்துள்ள நிலையில், இந்த ஏவுகணை அனுப்புவது ஒரு சவாலான காரியமாகவே கருதப்படுகிறது. டிசம்பர் 2019 முதல் சிறிய ஏவுகணையை ஏவுவதில் தாமதம் இருந்தபோதிலும், செயற்கைக்கோள்களை விரைவாக இயக்கவும் வருவாயை ஈட்டவும் நாங்கள் கடுமையாக உழைப்போம் என்று இந்நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டிபோயர் என்பவர் தெரிவித்துள்ளார்.

ரேடியோ அதிர்வெண் நுண்ணறிவு
மேலும் எங்கள் தனிப்பட்ட ரேடியோ அதிர்வெண் நுண்ணறிவு தரவு அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் கச்சிதமாக இருக்கும் என்றும், இதனால் சட்டவிரோதமான நடவடிக்கைகலை கண்டறிய முடியும் என்றும், பிராட்காஸ்ட் டிரான்ஸ்பாண்டர் முறையைப் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்றும், அதனால் எங்களுடைய டேட்டா சவாலான பூமத்திய ரேகை பகுதிகளுக்கு மேலாக உகந்ததாக இருக்கும் என ஆண்டிபோயர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications