சென்னையை சேர்ந்த கூகுள் துணை தலைவர் குறித்து உங்களுக்கு தெரிந்திராத தகவல்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்திய வம்சாவெளியை சேர்நத ஒருவருக்கு உயரிய பொறுப்பினை வழங்க இருப்பதாக கூறப்படுகின்றது. கூகுள் நிறுவனத்தின் துணை தலைவராக இருக்கும் சுந்தர் பிச்சை ஆண்ட்ராய்டு மற்றும் க்ரோம் பிரிவை கவனத்து கொள்வது பெரும்பாலானோர் அறிந்ததே.
இண்டர்நெட் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் சுந்தர் பிச்சை குறித்து உங்களுக்கு தெரிந்திராத சில தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

சென்னை
1972 ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்தார்

இயற் பெயர்
சுந்தர் பிச்சை அவர்களின் உண்மை பெயர் பிச்சை சுந்தராஜன்

கூகுள்
கூகுள் நிறுவனத்தில் 2004 ஆம் ஆண்டு ப்ராடக்ட் மற்றும் இன்னோவேஷன் துறையில் பணியை துவங்கினார் சுந்தர்.

ஸ்காலர்
உலகின் முன்னணி பல்கலைக்கழகமான பென்சில்வேனியா செய்பெல் ஸ்காலராக சுந்தர் பிச்சையை அறிவித்தது.

கல்லூரி
சுந்நர் பிச்சை தனது இளநிலை பட்டத்தினை ஐஐடி கராக்பூரில் பெற்றதோடு வெள்ளி பதக்கத்தையும் பெற்றார்.

மேற்படிப்பு
அமெரிக்காவில் சுந்தர் பிச்சை எம்.எஸ் மற்றும் எம்பிஏ போன்ற பட்டங்களை ஸ்டான்ஃபோர்டு மற்றும் வார்தன் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

துணை தலைவர்
தற்சமயம் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு, க்ரோம் மற்றும் செயலிகள் பிரிவின் துணை தலைவராக இருக்கின்றார்.

டிரைவ்
கூகுள் டிரைவ், ஜிமெயில் செயலி, கூகுள் வீடியோ கோடெக் போன்றவை உருவாக சுந்தர் முக்கிய காரணமாக இருந்தார்.

க்ரோம்
க்ரோம் இயங்குதளம் மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளில் இவரது பணி இவரை கூகுளில் உயரிய பதவிக்கு அழைத்து சென்றது.

டுவிட்டர்
2011 ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனம் சுந்தர் பிச்சைக்கும் பணி வழங்க தயாராக இருந்தது, இருந்தும் கூகுள் நிறுவனம் $50 மில்லியன் வரை ஊதியம் அளித்தது.


Click it and Unblock the Notifications