Just In
- 7 min ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 1 hr ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 1 hr ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 2 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்திய ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா பச்சை கொடி-நடுங்கும் சீனா.!
அமெரிக்காவால், இந்தியாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா பச்சை கொடி காட்டியுள்ளது. இதற்கான பரீசீலனை நடந்து கொண்டிருக்கின்றது.
இந்தியா போக்ரானில் அணு குண்டு சோதனை நடத்தப்பட்ட போது, பொருளாதார தடையை விதித்து அமெரிக்கா விதித்தது. இந்தியா அந்த தடையை உத்தரவையும் மீறியும் செயற்கைகோள்களுக்கு தெரியாமலும் இந்தியா சார்பில் மீண்டும் போக்ரானில் அணு குண்டு சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தால், பல்வேறு நாடுகளும் நடுங்கின. இதன் பிறகு பல்வேறு சட்டங்கள் இந்தியாவின் மீது கடுமையாக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியா தங்கள் நாட்டை பாதுகாக்கவே இதுபோன்ற சோதனைகளையும் செய்வதாக பல்வேறு முறை அமெரிக்காவிடம் தெரிவித்தது. இந்தியாவால் மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று தெரியவந்ததால், தற்போது அமெரிக்காவால், இந்தியாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா பச்சை கொடி காட்டியுள்ளது. இதற்கான பரீசீலனை நடந்து கொண்டிருக்கின்றது.
இந்தியா அணு ஆயுத சோதனை:
இந்தியாவின் முதல் அணுக்கரு வெடிப்பு சிரிக்கும் புத்தர் எனப்பட்டது. இது ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18ல் நிகழ்த்தப்பட்டது. இது இந்திரகாந்தி ஆட்சியின் போது நடத்தப்பட்டது.
அணுக்கரு வெடிப்பு சோதனைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகள் மட்டுமே இதற்கான வல்லமை படைத்த நாடுகளாக கருதப்பட்டு வந்தது.
சபையின் உறுப்பினராக இல்லாத இந்தியா இந்த பரிசோதனைகளை நிகழ்த்தியதை இதர நாடுகள் உறுதி செய்தது. இந்தியா இந்த பரிசோதனைகளை கனடா நாட்டின் அணுமின் உலை தொழில் நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தியது. இந்த அணுக்கரு வெடிப்பின் பொழுது வெளிப்பட்ட ஆற்றலின் அளவு சுமார் 8 கிலோ டன்கள் என கணக்கிடப்பட்டது.
2ம் அணு குண்டு சோதனை:
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 1998ல் இதே மே 11ம் நாளில், ராஜஸ்தானின் போக்ரான் பாலைவனப் பகுதியி்ல் அணு குண்டு சோதனையை நடத்திக் காட்டினார். அப்போதைய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த அப்துல் கலாம் தலைமையிலான குழு இதனை மிகக் கச்சிதமாக நடத்தியது.
5 சோதனைகளை நடத்தியது:
மே 11, மே 13 என இரு நாட்களில் சக்தி 1, சக்தி 2, சக்தி 3, சக்தி 4, சக்தி 5 என மொத்தம் 5 அணு குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ஒன்று ‘தெர்மோ நியூக்ளியர் பாம்' எனப்படும் ‘ஹைட்ரஜன் குண்டு'. Nuclear fusion எனப்படும் அணுக்கள் இணைவுச் சோதனை ஒன்றும், Nuclear fission எனப்படும் அணுப் பிளவுச் சோதனை 4ம் என மொத்தம் 5 சோதனைகள்.
அஞ்சாத வாஜ்பாய்:
இந்த சோதனைக்கு பிறகு இந்தியாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார தடையை விதித்தின. இதற்கு ஒரு போதும் அஞ்சாமல் வாஜ்பாய் தைரியமாக அரசை வழி நடத்தினார். மேலும் தொடர்ந்து அணு குண்டு சோதனைகளை நடத்த முடிவு எடுத்தார்.
நாட்டின் பாதுகாப்பு:
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்காக இந்தியா சோதனை செய்கின்றது. மற்ற நாடுகளின் மீது அணு ஆயுதங்களை ஒரு போதும் தவறாக கையாளாது என்று என்று ஐநா சபையிடம் இந்தியா கூறியது. இதைத்தொடர்ந்த இந்தியாவும் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளையும் வெற்றிகரமாக நடத்தியது.
இந்தியாவின் ஏவுகணைகள்:
இதைத்தொடர்ந்து இந்தியா அக்னி, அஸ்திரா, ஆகாஷ், இந்தியாவின் ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள், சவுரியா ஏவுகணை, சூரியா தாக்குகணை, தனுஷ் ஏவுகணை, திரிசூல் ஏவுகணை, நாக ஏவுகணை, நிர்பை, பிரகார் ஏவுகணை, பிரமோஸ், பிரித்வி ஏவுகணை, பினாகா ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
டிரம்பு உரை:
அமெரிக்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ரஷ்யாவுடனான அணு ஏவுகணை ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது சரியானதுதான் என குறிப்பிட்டார்.
ரஷ்யா மீது குற்றம் சாட்டினார்:
ரஷ்யா தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறிவந்ததாக குற்றஞ்சாட்டிய டிரம்ப், அணு ஏவுகணைகள் தொடர்பான புதிய உடன்படிக்கையை அமெரிக்கா மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
புதிய உடன்படிக்கையில் இந்தியா:
பிருத்வி, அக்னி போன்ற ஏவுகணைகளை இந்தியாவும், பாபர் ஷாகீன் போன்ற ஏவுகணைகளை பாகிஸ்தானும் தயாரித்து இருப்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப், புதிய உடன்படிக்கையில், இந்தியாவையும், பாகிஸ்தானையும் சேர்க்க சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் கூறினார்.
சீனாவுக்கு நடுக்கம்:
இந்தியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்க இருப்பதால், இந்தியாவை கண்டு சீனா தற்போது நடுக்கத்தில் இருக்கின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470