Just In
- 10 min ago ஓபன் பண்ணா? நெருப்பா ஒரு 5G போன்.. சில்லுனு வாங்கும் பட்ஜெட் விலை.. தெரிபறக்கும் realme P1 Pro என்ன விலை?
- 1 hr ago ரூ.299 விலையில் TWS இயர்பட்ஸ்.. லேட் பண்ணா கிடைக்காது.. உடனே வாங்குங்க.. எந்த மாடல்? எங்கே வாங்கலாம்?
- 1 hr ago இதுவும் போச்சா.. மோடியின் தேர்தல் அறிக்கை.. அந்த 2 விஷயத்தை பார்த்துட்டு.. ஆடிப்போன ISRO விஞ்ஞானிகள்!
- 2 hrs ago மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.15000 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
Don't Miss
- News "மிஷன் அமேதி.." இந்த முறை மிஸ் ஆகாது.. ராகுல் போடும் ஸ்கெட்ச்! உற்று நோக்கும் பாஜக.. கள நிலவரம் என்ன
- Lifestyle ப்ராக்கோலியை எப்படி செய்றதுன்னு தெரியலையா? அப்ப இப்படி ஒருமுறை பொரியல் செய்யுங்க..
- Automobiles 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா 18 ரூபாய் சுருட்டறாங்களா! நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த மோசடி அம்பலம்!
- Movies Pandian stores 2 serial: நிச்சயதார்த்தம் கோலம் போட்ட மீனா -ராஜி.. அட கலைச்சிட்டாங்களேப்பா!
- Travel திருப்பதி போறீங்களா – அப்போ IRCTCயின் இந்த பேக்கேஜை புக் பண்ணுங்க – ஒரே டூரில் 5 கோயில்கள்!
- Finance இஸ்ரேல் மீது ஈரான் வீசிய குண்டு மழை.. நடுவில் இப்படியொரு விஷயம் நடந்திருக்கே.. ஷாக்..!!
- Sports பொய்யாக சிரிக்கிறார்.. சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கிறார்.. ஹர்திக்கை வறுத்து எடுத்த ஜாம்பவான்
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
அதிநவீன போர் விமானத்தை படையில் சேர்த்த இந்தியா: பாகிஸ்தான் பதற்றம்.!
மேலும் தீவிர வாதத்தை அழிக்கும் வகையில் இந்திய ராணுவம் தற்போது செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது அதிநவீன போர் விமானத்தை படையில் இணைத்துள்ளது இந்தியா. இதனால் பாகிஸ்தானுக்கு பதற்றம் ஏற்பட்டுள்
பாகிஸ்தான் தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் ராணுவத்தினர் 44 பேர் பலியாகினர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதிகளுக்கு தஞ்சம் கொடுத்து பாகிஸ்தான் இருந்து வருகின்றது.
மேலும் தீவிர வாதத்தை அழிக்கும் வகையில் இந்திய ராணுவம் தற்போது செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது அதிநவீன போர் விமானத்தை படையில் இணைத்துள்ளது இந்தியா. இதனால் பாகிஸ்தானுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
விமானப்படை அதி நவீனம்:
இந்தியா தனது விமானப்படை அதி நவீனத்தில் மாற்றி அமைத்து வருகின்றது. மேலும், அதில் முப்படைகளையும் மும்முரமாக மாற்றி அமைத்து வருகின்றது. இதில் ராணுவத்தில் புதிய தொழில்நுட்பத்திலான போர் தளவாடங்களையும் வாங்கி குவித்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களையும் ராணுவத்தில் இணைத்து வருகின்றது. விமாப்படை இந்தியா மேம்படுத்தி வருவதால், சீனா-பாகிஸ்தான் கிடுகிடுத்து போய் உள்ளன. மேலும், இந்தியா தனது விமானப்படையில் வரும் மார்ச் மாத்திற்குள் கூடுதலாக 4 தேஜாஸ் விமானங்களை இணைத்துக் கொள்கின்றது.
இந்திய விமாப்படை:
இந்தியா விமானப்படையை துரிதமாக நவீனமயமாக்கி வருகின்றது. ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்தும் விமானப்படைக்கு தேவையான அணு ஆயுதங்கள், ஹெலிகாப்படர்கள், போர் விமானங்கள் என வாங்கி வருகின்றது. மேலும், பழைய விமானங்களையும் புதுப்பித்து வருகின்றது.
ரேடார் தொழில்நுட்பம்:
இந்தியா விமானப்படைக்கு ரேடார் தொழில்நுட்பம் உட்பட புகுத்தப்பட்டு வருகின்றது. உள்நாட்டில் கட்டமைப்பு மற்றும் மேம்படுத்துப்படும் போர் விமானங்களுக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.
தேஜாஸ் போர் விமானம்:
பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டில்ஸ் லிமிடெட், தேஜாஸ் போர் விமானங்களை தயாரித்து வருகிறது. நடுவானிலேயே எரிபொருள் நிரப்புவது, இலக்குகள் மீது துல்லியமாக குண்டுகள் வீசுவது, அதிநவீன ரேடார் போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டது தேஜாஸ் போர் விமானம்.
சேர்க்க ஒப்புதல்:
தேஜாஸ் எம்கே1 என்ற இலகு ரக போர் விமானங்களை இயக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், இந்திய விமானப்படையில் கூடுதலாக 4 தேஜாஸ் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன.
12 விமானம் சேர்ப்பு:
ஆண்டுக்கு 8 விமானங்கள் என்பதற்குப் பதில் 16 விமானங்களை தயாரிக்க வசதியாக 1381 கோடி ரூபாயை 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு ஒதுக்கியது. தற்போது இயக்குவதற்கு இறுதி ஒப்புதல் அளிக்கப்ட்ட 16 விமானங்களில் 12 விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய 4 விமானங்கள் வரும் மார்ச் மாதத்திற்குள் இணைக்கப்படும் என்று பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சுபாஷ்பாம்ரே தெரிவித்துள்ளார்.
கண்காட்சியில் 61 போர் விமானங்கள்:
இலகுரக போர் விமானமான தேஜாஸ்-ஐ, இந்திய விமானப் படையில் இணைப்பதற்கான ஒப்புதல் கிடைத்தது. ஏரோ இந்தியா என்ற போர் விமானங்கள் காட்சி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கண்காட்சியில் 22 நாடுகளின் 61 போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ராணுவத்தில் இணைக்க ஒப்புதல் சான்று:
இரண்டாவது நாளான இன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தை விமானப் படையில் இணைப்பதற்கான ஒப்புதல் சான்று வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழை ராணுவ விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பானது விமானப் படை தலைமைத் தளபதி BS தனோவாவிடம் வழங்கியது. இதனிடையே தேஜாஸ் போர் விமானத்தில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்தார்
பாகிஸ்தான்-சீனா:
இந்தியா தனது படையில் அதிவேகமாக நவீன விமானங்கள் மற்றும் வெளிநாட்டு போர் விமானங்கள், தொழில்நுட்பத்தினால ஆயுதங்களையும் புகுத்தி வருகின்றது. இதனால் பாகிஸ்தான், சீனாவுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பைக் கருதி இஸ்ரோவின் அடுத்த அடி.! 2 புதிய பாதுகாப்பு செயற்கைக்கோள்கள்.!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO), ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் இரண்டு சிறிய பாதுகாப்பு செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை இஸ்ரோ இன்று அறிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்
ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் செலுத்தப்படும் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டின் மொத்த எடை 500 கிலோ கிராம் என்றும், இந்த ராக்கெட்டில் எடுத்துச் செல்லப்படும் இரண்டு சிறிய பாதுகாப்பு செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 120 கிலோ கிராம் எடை கொண்டதென்றும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.
பாதுகாப்பு செயற்கைக்கோள்
இரண்டு தனி பாதுகாப்பு செயற்கைக்கோள்களைத் தவிர்த்து அடாப்டர்கள் மற்றும் இதர சாதனங்கள் எல்லாம் 300 கிலோ கிராம் வரை எடை கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டின் மொத்த எடை 110 டன்னாக இருக்கும் என திரு சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்
இரண்டாவது வணிகப் பிரிவின் தேவை பற்றி இஸ்ரோ தலைவர் சிவனிடம் கேட்டபோது, ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் முக்கிய டிரான்ஸ்பாண்டர், லீசிங் மற்றும் பிற வேலைகளைக் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2 அல்லது 3 எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்
வரும் காலங்களில் எஸ்.எஸ்.எல்.வி-யின் உற்பத்தியை அதிகரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் குறைந்தது மாதத்திற்கு 2 அல்லது 3 எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்களை ஏவத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போலார் சாட்டிலைட்
அதுமட்டுமின்றி வரும் காலத்தில் போலார் சாட்டிலைட் ஏவுகணை வாகன வாகனங்களின்(PSLV) உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470