தீவிர டிவி சீரியல் ரசிகர்: ஸ்மார்ட்போனில் டிவி சீரியல் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிய நபர்.!
இப்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது, காரணம் நமது முக்கியமான ஒரு சில வேலைகளை முடிக்க இந்த ஸ்மார்ட்போன்கள் அதிகம் உவுகின்றன என்றே கூறலாம். ஆனால் ஸ்மார்ட்போன்களை தேவையான இடங்களில் மட்டுமே பயன்படுத்தினால் மிகவும் நல்லது.

இந்நிலையில் கோவையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தனக்கு பிடித்த சீரியல் பார்த்துக்கொண்டே வண்டி ஒட்டிய நபரின்
வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அதிக வைரலாகி உள்ளது.

அதாவது நாடுமுழுவதும் சாலை விபத்து மூலம் இறப்பவர்களின் சதவீதம் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று செய்திகளில் நாம் பார்த்திருப்போம். குறிப்பாக சாலை விபத்திற்கு முக்கிய காரணங்களாக இருப்பது மது மற்றும் செல்போன் என்றேகூறலாம்.

இப்போது கூட பலர் செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குவதை நம்மால் பார்க்க முடியும். இந்த நிலையில் கோவையை சேர்ந்த ஒரு நபர் ஒருபடி மேலே சென்று சீரியல் பார்த்துக்கொண்டே வண்டி ஓட்டி சென்றுள்ளார். குறிப்பாக இதுபோன்ற செயல் மிகவும்
ஆபத்தை ஏற்படுத்தும்.

வெளிவந்த தகவலின் அடிப்படையில், இந்த சம்பவம் கோவை காந்திபுரம் புதிய மேம்பாலத்தில் நடந்துள்ளது. அதுவும் இரவு நேரத்தில் மேம்பாலத்தில் தனது இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிக்கொண்டே பைக்கில் ஸ்டாண்ட் போல செட் செய்து ஸ்மார்ட்போனை அதில் வைத்து சீரியல் பார்த்து வந்துள்ளார் அந்த நபர்.

குறிப்பாக இந்த செயலை அப்பாலத்தில் சென்ற மற்றொரு நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் போலீசார் அந்த டிவி சீரியல் பார்த்த தீவிர ரசிகரை தேடி வந்தனர். பின்பு விசாரணையில் வண்டி முத்துசாமி என்பவர் பெயரில் உள்ளது எனத் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால், இந்திய சாலைகள் தினந்தோறும் அதிக விபத்துக்களை சந்தித்து கொண்டுள்ளன. பின்பு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசி கொண்டு வாகனம் ஓட்டுவது ஆகியவையே பெரும்பாலான விபத்துக்களுக்கு
காரணமாக உள்ளன.


Click it and Unblock the Notifications