ரூ.1500க்கு கோவை இளைஞரின் ஏசி: கோடை வெயிலுக்கு குட்பாய்.!
சாதாரண ஏசி வாங்க வேண்டும் என்றால் ரூ.25,000 முதல் ரூ.30000 வரை செலவு ஆகின்றது. ஆனால் கோவையில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ரூ.1500க்கும் ஏசியை வடிவமைத்து அசத்தியுள்ளார் இந்த இளைஞர்.
தற்போது தமிழகம் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் கோடை வெளியில் மண்டையை பிளக்கும் வகையில் சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றது. நாம் இயற்கையை விட்டு விட்டு, நவீன யுகத்தில் வாழ்வதால், மின்சாதனங்கள் உடன் தான் நம் வாழ்கையை தொடர்ந்து கொண்டிருகின்றோம்.
தற்போது கோடை வெயில் வாட்டி வதக்கி வருகின்றது. வெயிலை தாக்கத்தை வீடுகளில் அதிகமாக இருக்கும் மின் விசிறியை வைத்து, பூரணமாக தடுக்க முடியாது.
சாதாரண ஏசி வாங்க வேண்டும் என்றால் ரூ.25,000 முதல் ரூ.30000 வரை செலவு ஆகின்றது. ஆனால் கோவையில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ரூ.1500க்கும் ஏசியை வடிவமைத்து அசத்தியுள்ளார் இந்த இளைஞர்.

வெயின் தாக்கம்:
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் வெயிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் வெயின் தாக்கத்தால், நகர்புறங்களில் உள்ள மக்கள் பெரும் அவஸ்திபடுகின்றனர்.
பெரும் பணக்காரர்கள் உள்ளவர்கள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றனர்.
நடுத்தரத்த மற்றும் ஏழை குடும்பங்களால் ஏசியை வாங்க முடியாத நிலை இருக்கின்றது.
இதற்கு ஒரு விடிவு கண்டுள்ளார் கோவையை சேர்ந்த இளைஞர் ஜெகதீஸ்.

கிராமத்து ஏசி:
கோவையை அமுத்த செல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ், தனது மகளுக்கு வெயிலின் காரணமாக ஏற்பட்ட நோயில் இருந்து பாதுகாக்க ஏசியை வாங்க முயற்சித்து உள்ளார். ஆனால் விலை அதிகமாக இருந்ததால் தானே ஒரு கிராமத்து ஏசியை உருவாக்கியுள்ளார்.

வீட்டில் ஏசியை உருவாக்கினார்:
பேன், பானை, சிறு மின் மோட்டார், பிவிசி பைப் என எளிய பொருட்களால் வீட்டிஅலயே ஏசியை உருவாக்கி உள்ளார்.
அது நீரில் பட்டு வரும் காற்று குளிர்ச்சி தரும் என்ற எளிய அறிவியல் அடிப்படையில், கூழாங்கல், பானை, வெட்டிவேர், தண்ணீர் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தியுள்ளார்.

குளிர்ந்த காற்று தருமாம்:
குறைந்த செலவில் உருவாக்கியுள்ள இந்த ஏசி சூடான காற்றை உள்ளே இழுத்து, குளிர்ந்த காற்றை வெளியேற்றும் என்று இந்த ஏசியால் எந்த பிரச்னைகளும் ஏற்படாது என்றும் ஜெகதீஸ் கூறியுள்ளார்.

காப்புரிமை:
தனது வீட்டில் இருந்த கிராமத்து ஏசியை பார்த்துவிட்டு அருகிலிருந்தவர்களும் இதுபோன்று செய்து தரும்படி கேட்பதால், இதற்கு காப்புரிமை கோரி முயற்சி செய்து வருவதாக ஜெகதீஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஏர்பேக் மொபைல் கவர் கண்டிப்பாக உங்களுக்கு பயன்படும்.!
இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் நமக்கு பல்வேறு வகையில் மிகவும் உதவியாய் இருக்கிறது, அதன்படி ஜெர்மனியைச் சேர்ந்த என்ஜினியரிங் மாணவர் ஒருவர், ஸ்மார்ட்போன்களுக்கான ஏர் பேக் போன் கவரை உருவாக்கியுள்ளார், இது ஸ்மார்ட்போனுக்கு மிகவும் பாதுகாப்பான வகையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏர்பேக் மொபைல் கவர் சிறப்பு என்னவென்றால் இவற்றில் உள்ள ஸ்பிரிங் தானாக விரிந்து,மொபைல் அடிபடாமல் பாதுகாக்கிறது,மேலும் தற்சமயம் இந்த புதிய வகை மொபைல் கவருக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பிலிப் ஃபிரென்சில் ஜெர்மனியில் இருக்கும் ஆலென்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிலிப் ஃபிரென்சில் என்ற மாணவர் தான் இந்த ஏர்பேக் மொபைல் கவரை உருவாக்கியுள்ளார். முதலில் அவர் சிறிய கனமற்ற போன் கவரை உருவாக்க வேண்டும் என் அவர் தேடுதலை தொடங்கியிருக்கிறார், பின்பு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏர்பேக் மொபைல் கவரை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு ஆண்டுகள்: பிலிப் ஃபிரென்சில் நான்கு ஆண்டுகளுக்கு
பிறகு கண்டுபிடித்த இந்த சாதனத்திற்கு ஆக்டிவ் டாம்பிங் என்ற பெயர் வைத்துள்ளார், மேலும் பயனத்தின் போது கண்டிப்பாக இந்த சாதனம் மிகவும் உதவியாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சென்சார்: பிலிப் ஃபிரென்சில் உருவாக்கிய இந்த மொபைல்
கவரில் சென்சார் ஒன்று இடம்பெற்றுள்ளது, இது மொபைல் கீழே விழும்போது, அந்த சென்சார், 4 ஸ்பிரிங்குகளை தட்டிவிட்டு மொபைலை எவ்வித சேதம் இன்றி காக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்புரிமை: இந்த மொபைல் கவர் இதுவரை விற்பனைக்கு
வரவில்லை, இதற்கான காப்புரிமையை பிலிப் பெற்றுள்ளார், பிலிப் உருவாக்கிய இந்த சாதனத்தை பாராட்டி ஜெர்மனி சொஸைட்டி ஆஃப் மெக்கட்டிரானிக்ஸ் அமைப்பு பாராட்டை தெரிவித்துள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைவரின் கைகளிலும், பிலிப்பின் இந்த ஏர் பேக் மொபைல் கவர் சாதனத்தை பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications