மொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.! காரணம் என்ன தெரியுமா?
ஹைதெராபாத்: வத்சபூர் மாவட்டத்தில் உள்ள வத்சர் பஞ்சாயத்துக்கு ஒன்றிய ஓரென்பர்க்கில் நேற்று மொபைல் போன் சார்ஜ் செய்த பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பலியாகியுள்ளார்.
ஹைதெராபாத்: வத்சபூர் மாவட்டத்தில் உள்ள வத்சர் பஞ்சாயத்துக்கு ஒன்றிய ஓரென்பர்க்கில் நேற்று மொபைல் போன் சார்ஜ் செய்த பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களையும், பலரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

அர்ச்சனா
ராக்பாய் மற்றும் ரங்காவின் மகள் அர்ச்சனா வயது 20, தந்தையுடன் விவசாய வேலைகளைச் செய்து வந்திருக்கிறார். அருகில் உள்ள பள்ளியில் அர்ச்சனாவும் அவரின் தாயாரும் சமையல் வேலை பார்த்துவருகின்றனர்.

மொபைல் போன் மின்சாரம்
பள்ளியிலிருந்து மத்திய உணவிற்குப் பின் வீட்டிற்குச் சென்ற அர்ச்சனா, அவரின் வீட்டில் சார்ஜ் போடப்பட்ட மொபைல் போன்னை கையில் எடுத்தவுடன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

ட்ரான்ஸபார்மற்
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய அவரின் தாய், அர்ச்சனா அசைவில்லாமல் தரையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். அர்ச்சனா மின்சாரம் தாக்கி இறந்ததற்கு அவரின் வீட்டின் அருகிலிருந்த ட்ரான்ஸபார்மறில் ஏற்பட்ட பழு தான் காரணம் என்பது உறுதியாகியுள்ளது.

சார்ஜ் போட்டு பயன்படுத்த வேண்டாம்
மின்னழுத்தத்தினால் ஏற்பட்ட மாற்றத்தினால் மின்சாரம் தாக்கி இந்தச் சம்பவம் நடத்தெரியுள்ளது. மொபைல் போன்களை சார்ஜ் போட்டு பயன்படுத்தும் முறையை மக்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டாம் என்று அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ளது.

செல்பீ எடுக்க தடை..!
'இப்பிடியே போனால்' செல்பீ எடுப்பதை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள் என்றோ அல்லது செல்பீ எடுக்க இது தடை செய்யப்பட்ட பகுதி என்றோ என்று விளம்பர பலகை ஒன்று வைக்கும் நிலை கூட வரலாம்..!
செல்பீ - அறிமுகமானது, பின் அது ஒரு பழக்கமானது, 'வயசு' ஜூரமானது, பின் அது ஒரு 'மன' நோயாகி விட்டது என்று தான் கூற வேண்டும். அப்படியாக 'செல்பீ செல்பீ' என்று ஊறிப்போய் செல்பீக்காக தங்கள் உயிரையே விட்டவர்களையும், அது எப்படி என்பதையும் தான் பின் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றோம்..!

மின்சார வயர் :
18 வயது ரோமானிய பெண், செல்பீ எடுக்கையில் தெரியாமல் 27,000 வோல்ட்ஸ் மின்சார வயரை தொட்டு விட, உடல் கருகி இறந்து போனாள்..!

தரையில் விழுந்து :
ஸ்பெயினை சுற்றி பார்க்க சென்ற 24 வயதான போலாந்து பெண் ஒருவர், இந்த வரலாற்று சிறப்பு மிகுந்த பாலத்தில் இருந்து செல்பீ எடுக்கும் போது தவறி விழுந்து கான்கீரீட் தரையில் விழுந்து உயிரழந்தார்.

துப்பாக்கி :
மெக்ஸிக்கோவை சேர்ந்த இவர் துப்பாக்கியை வைத்து விளையாடிக்கி கொண்டே செல்பீ எடுக்கும் போது தவறுதலாக சுட்டுக்கொண்டார்.

கார் விபத்து :
மணப்பெண் மற்றும் தோழி இருவரும் கல்யாணத்துக்கு செல்லும் வழியில் கார் விபத்துக்கு முன் எடுத்த கடைசி செல்பீ..!

ரயில்வே பாலம் :
இந்த 17 வயது சிறுமி, 30 அடி உயர ரயில்வே பாலத்தில் ஏறி செல்பீ எடுக்க முயலும் போது, தவறி விழுந்து உயிர் இழந்தார்.

மலை உச்சி :
தன் காதலனுடன் சென்ற முதல் 'டேடிங்'கில், மலை உச்சியில் நின்று செல்பீ எடுக்க முயற்சிக்கும் போது, தவறி விழுந்து இந்த 21 வயது நிரம்பிய பெண் உயிர் இழந்தார்.

ஒலிம்பிக் செல்பீ :
பாத்ரூம் கண்ணாடியில் பறப்பது போன்று எடுக்கும் பிரபல செல்பீயான 'ஒலிம்பிக் செல்பீ' எடுக்கும் போது தவறி விழுந்து, இறந்து போனான் இந்த 18 வயது சிறுவன்..!

பேரலை :
இந்த கடற்கரையில் நின்று கொண்டு செல்பீ எதுக்கும் போது எழுந்த பேரலையால் உள்ளே இழுத்து செல்லப்பட்டு உயிரழந்து போனார், 18 வயது சிறுமி ஒருவர்..!

தம்பதி :
போலீஷ் நாட்டை சேர்ந்த தம்பதி ஒன்று, இந்த மலை உச்சியில் நின்று கொண்டு செல்பீ எடுக்க முயற்சிக்கும் போது, தவறி விழுந்து உயிர் இழந்துள்ளனர்.

பாடகர் :
'ராப்' பாடகரான இவர் பைக் ஒட்டிக் கொண்டே எடுக்க முயன்ற செல்பீ மூலம் விபத்துக்குள்ளாகி உயிர் இழந்தார்.


Click it and Unblock the Notifications