Just In
- 24 min ago யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 8 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 9 hrs ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 10 hrs ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
Don't Miss
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- Movies கனகாவின் காதலர் இவர்தான்.. போலீஸில் மாட்டிவிட பார்த்தார்.. செய்யாறு பாலு சொன்ன டாப் சீக்ரெட்
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மைக்ரோசாப்ட்-ஐ மீட்டெடுத்த இந்தியர் : குணத்தில் இவர் ஒரு சுந்தர் பிச்சை.!
வெறும் ஐந்து ஆண்டுகளில் மைக்ரோசாப்ட்-ஐ மீண்டெழச்செய்த நாதெள்ளா, அதை மீண்டும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக மாற்றினார். மேலும் அவர் அந்த இலக்கை அடைவதற்காக நிறைய பணியாற்றியுள்ளார்.
சத்யா நாதெள்ள முதல்முறையாக பிப்ரவரி 2014 இல் மைக்ரோசாப்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதிவியேற்றது முதல் அந்நிறுவனம் தள்ளாட தொடங்கிவிட்டது. அதன் ஸ்மார்ட்போன் வணிகம் கடுமையான தோல்வியுற்றது, விண்டோஸ் 8 கடுமையாக விமர்சிக்கப்பட்டது மற்றும் நுகர்வோர் அந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை இழக்க தொடங்கி இருந்தனர். எனவே அந்த சமயத்தில் தான் தனது உண்மையான பணியை ஆற்றச் சென்றார் சத்ய நாதெள்ளா.
வெறும் ஐந்து ஆண்டுகளில் மைக்ரோசாப்ட்-ஐ மீண்டெழச்செய்த நாதெள்ளா, அதை மீண்டும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக மாற்றினார். மேலும் அவர் அந்த இலக்கை அடைவதற்காக நிறைய பணியாற்றியுள்ளார்.
யார் இந்த சத்ய நாதெள்ளா?
1967 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் பிறந்த இவர், குழந்தைபருவத்தில் தொழில்முறை கிரிக்கெட் வீரராக விரும்பினார். பின்னர் தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகுந்த திறனை கொண்டிருப்பதை உணர்ந்தார். 1988 ஆம் ஆண்டில் மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-ல் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பிரிவில் தனது இளங்கலை பட்டத்தை பெற்று, 1990 ஆம் ஆண்டு தனது முதல் உண்மையான கணினி அறிவியல் படிப்பில் பட்டம் பெற அமெரிக்காவிற்கு பயணம் செய்தார்.
மைக்ரோசாப்ட்
சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நதெள்ளா, 1992 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். அப்போது பில்கேட்ஸ் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த நிலையில், அது உலகின் முன்னணி நிறுவனமாக இருந்தது. அவர் பணியாற்றிய முதல் ப்ராஜெக்ட்களில் ஒன்று தோல்வியடைந்த விண்டோஸ் என்டி தளம் ஆகும்.
மைக்ரோசாப்ட் ஏசர் -ஐ சீரமைத்தல்
2014 ல் நாதெள்ளா பொறுப்பேற்றபோது அதற்குமுன்பு அப்பதவியில் இருந்த ஸ்டீவ் பால்மர் செய்தவற்றில் மாற்றங்கள் செய்வதில் விரைவாக இருந்தார். மைக்ரோசாப்ட் ஏசர் கிளவுட் ப்ளாட்பார்ம் துவங்கப்பட்ட போது அது ஒரு சூதாட்டம் போல இருந்தது. நாதெள்ளா ஒரு படி மேலே சென்றார். லினக்ஸ் ஏசர் தளத்தில் செயல்படுவது புற்றுநோய் போன்றது என்ற திறந்த மூல பால்மரின் கருத்திற்கு மாற்றாக ஓபன் சோர ஸ் போட்டியாளரான லினக்ஸை அனுமதிப்பது என்ன சர்ச்சைக்குரிய முடிவை வெளியிட்டார். அப்போதிருந்து அந்த தளம் வியக்கத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளது என்றாலும், அது இன்னமும் அமேசானின் AWS ஐ விட பின்தங்கியே உள்ளது.
மற்ற தளங்களை அரவணைத்தல்
நாதெள்ளாவின் தலைமையின் கீழ், மைக்ரோசாப்ட் அதன் பிரபலமான மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் மென்பொருளை மற்ற தளங்களில் பயன்படுத்த அனுமதித்து. குறிப்பாக ஐஓஎஸ் மற்றும் ஆண்ராய்டு போன்கற மொபைல் தளங்களில். இது அவர்களுக்கு முன்னெப்போதும் இல்லாதவகையில் மில்லியன் கணக்கான புதிய பயனர்கள் பெற்றுத்தந்தது.
ஆபிஸ்365-ன் வெற்றி
கிளவுட் கம்ப்யூட்டிங்கிற்கு இது புதிய மையமாக இருப்பதால், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆபிஸ் 365 என்ற புதிய கிளவுட் உற்பத்தித்திறன் தொகுப்பின் பயன்பாடுகளுடன் நிறுவனங்களை அணுகுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் கூட்டாண்மை பெருநிறுவனங்களுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டதுடன், இறுதியில் மென்பொருள்கள் மற்றும் சேவைகளின் வரிசையில் நுகர்வோர் பதிப்பையும் வெளியிட்டுள்ளது.
திறமையான கையகப்படுத்துதல்கள்
நாதெள்ளா முதன்முதலாக பதவியேற்றபோது, அதன் விலையுயர்ந்த கையகப்படுத்தலான நோக்கியா தோல்வி அடைந்தது என்ற உண்மையை சமாளிக்க இன்னமும் அந்நிறுவனம் முயன்று வந்தது. அதை அவர் மிகவும் சீக்கிரமாகவே முடித்துவிட்டாலும், புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பிற நிறுவனங்களை வாங்க துவங்கினார்.
அந்த நேரத்தில் மைன்க்ராப்ட் $ 2.5 பில்லியன் செலவில் மிகவும் விலையுயர்ந்த கையகப்படுதலாக இருந்தாலும், அதன் பிரபலமான விளையாட்டுகளிலிருந்த வருவாய், எல்லா இடங்களிலும் இருந்த கல்வி சந்தை உள்ளிட்டவை பல ஆண்டுகளாக அதை உச்சத்தில் தக்க வைத்துக்கொள்ள உதவியது. ஒரு நிலையான விகிதத்தில் வருவாயையும் பயனர்களையும் பங்களித்துள்ள லிங்க்ட்இன் ஒரு சிறந்த கையகப்படுத்தல் ஆகும்.
டிரில்லியன் டாலர்
இதற்கிடையில் கிட்ஹப், இந்நிறுவனத்தின் மிகவும் இலாபகரமான ஒன்றாக இல்லாமல் இருந்தாலும், நதெள்ளா வருவாயை தாராளமாக தியாகம் செய்ய தீர்மானித்ததால், அதற்கீடாக விலைமதிப்பற்ற டெவலப்பர்களுடன் நேரடியாக இணைவதற்கு வாய்ப்பை பெற்றார். மேலும் லினக்ஸ் போன்ற ஓபன் சோர்ஸ் தயாரிப்புகள் மீதான தங்கள் நிலைப்பாட்டை மாற்றிவிட்டதால், நம்பிக்கையும் பெற்றிருக்கிறார்கள்.
இந்த சிறிய மாற்றங்கள் மூலம் தான் சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தை வீழ்ச்சியின் விளிம்பில் இருந்து மீட்டு ஒரு டிரில்லியன் டாலர் நிறுவனமாக மாற்றியமைக்க முடிந்தது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470